இடுகைகள்

கானல் நீர்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இல்லாமையின் மூலம் சொல்லப்படும் இருப்பை பேசுகிறது. இயற்கை, கலை, மரபு, உணர்வு, பெண்ணியம் - எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய அடிப்படை பண்புகள் மறுக்கப்பட்டுள்ள ஒரு உலகம் வரிசையாக உருவாக்கப்பட்டுள்ளது. கவிதை முகில்  இடறிய  வானம், பனி படறா புல்வெளி, அலை  உறங்கும் கடல், இலை வருடா பூங்காற்று, பெண்மை மறைத்த நளினம், வாழை மறுத்த விருந்தோம்பல், திசைகள் கலைந்த பூலோகம். கார் முகில் பழித்த மயில்தோகை, தூரிகை துறந்த அழகோவியம், தளபதி முன்மொழியா போர்முழக்கம், ஜதி இணையா நாட்டியம், மழை நனையாத மலையருவி, மழலை உணரா தாலாட்டு, தேரடி காணா தேரோட்டம். இரவு விழித்திராத விடி வெள்ளி, மலர்கள் நுகராத தேனீக்கள், வெயில் வடித்த வானவில், வரலாறு பதியாத செப்பேடு, சுமை விழுங்கிய பெண்ணாற்றல் கண்டும், காணாமலும் அசைப்போடும் சிலை வடித்த முகபாவம் கானல் நீரில் கரையும் உயர்வு பெற்றது.

நானும் அவளும்

படம்
உள்ளடக்கம் இயற்கையின் மடியில் மலர் ஒரு உயிராகப் பிறந்து, மொட்டாகி, மலர்ந்து வண்ணத்துப் பூச்சிகளுடன் உறவாடி தன் வாழ்வை நிறைவு செய்து உதிரும் தருணம் வரை நிகழும் வாழ்க்கைச் சுழற்சியை இந்தக் கவிதை சித்தரிக்கிறது. உதிர்வு இங்கு இழப்பாக அல்ல: தொடர்ச்சிக்கான அமைதியான பிரியாவிடையாக வெளிப்படுகிறது கவிதை இலை  தாங்கிய  மொட்டுக்கள் இரவின்  காவலில் இதழ்  விரித்து, பனித்துளியில்  நீராடி, வெண்கதிரில்  இதழ்  உலர்த்தி, வண்டிசையின்  வரவேற்பில் தேவதைகள்  கைப்பட ஒற்றை  நாற்காலியில் வீற்றிருக்கின்றன. முட்கள்  பதித்த திரைமறைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட  வண்ணங்களை, ஓவியமாய்  தீட்டப்பட்ட  இறகுகள், காற்றினும்  மெல்லிய  இடை  விரிந்து, இயற்கை  பகிர்ந்த  பருவ கால இரகசியத்தை கொண்டு  சேர்க்கும் வண்ணத்து  பூச்சி மலரின்  உற்ற தோழன். எண்களின்  முதன்மையாய் வரிசைகள்  பின்தொடரும், ஒற்றைப் பொழுதின் விதி சுமந்து இயற்கையுடன் ஒன்றென கலந்த உயிரின்  இழப்பை, மலர் பொழிந்து, பிரியாவிடை  அளிக்கும...

இரண்டெழுத்து

படம்
உள்ளடக்கம் வாழ்க்கை பயணத்தில் திசை மாறும் தருணங்கள், உறவுகளில் ஏற்படும் இடர்பாடுகள், நம்பிக்கை இருந்தும் ஒளி மறையும் நிலைகள்- இவை அனைத்துக்கும் காரணமாக வெளிப்படையாக விதி தோன்றினாலும், உண்மையில் அது மனித நன்னடத்தை தவறும் இடங்களில் உருவாகும் விளைவு என்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது. இயற்கையும் வாழ்க்கையும் ஒரே சிந்தனைப் பாதையில் இணையும் தத்துவப் பின்னணியே இதன் சூழல். கவிதை பொருள் உணரா பயணத்தில்- இருள் எதிர்த்த விடிவெள்ளி திசை உணர்த்த நினைத்தாலும், கரை படிந்த வெண்முகில் மதி மறுத்தும், இடை வலுத்தும், இமை தூரிகை இதமாய் சம்மதித்தாலும், தடையும் தரமற்றதாகும் நன்னடத்தை தவறிய விதியால்.. தென்றல் அசையும் மாடத்தில், வெண்மலர்கள் தரை தவழ்ந்து நறுமணம் சூழும் தருணத்தில், வேரறுத்த சூறைக்காற்று இடர் ஏற்று, நிலை குலைத்தது நன்னடத்தை தவறாய விதியால்.. உறவு பாலம் தழைத்து வாழையின் வரிசை தொடர்ந்தாலும், வசை பாடும் கரையான் கூட்டம் அரிக்க நினைத்தது: பாதை தகர்ந்தது நன்னடத்தை தவறிய விதியால்.. மேற்கில் திசை மறைத்தாலும், கிழக்கில் உதயமாகும்,  எனும் தருணத்தில் காற்றழுத்தம் மேலோங்கி, ஒளியும் முடங்கி போனது, நன்னடத்த...

எதிர்முனை

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை உலகத்தில் காணப்படும் சக்தி, கட்டுப்பாடு, அதிகாரம் ஆகியவை எதனால் நார்ணயக்கப்படுகின்றன என்பதைக் குறித்து சிந்திக்கிறது. இயற்கை நிகழ்வுகள், காலம், மனித உழைப்பு, சமூக அமைப்புகள், மனநிலை மற்றும் அகந்தை ஆகியவை தத்தம் காரணிகளின் வசப்படுத்தலுக்குள் இயங்குகின்றன என்பதை வரிசையாகக் காட்டுகிறது. ஆனால் இறுதியில், உண்மை, நேர்மை மற்றும் ஆழ்ந்த புரிதல் ஆகியவை எந்தக் கட்டுப்பாட்டுக்கும் முழுமையாக உட்படாதவை என்பதை உணர்த்துகிறது. இது மனிதன் எல்லாவற்றையும் அளக்கவும், ஆளவும் முடியும் என்ற அகந்தைக்கு எதிரான ஒரு தத்துவக்  கேள்வியாக நிற்கிறது. கவிதை இருளின் கர்வம் மின்மினி  வசப்படும் ,வெண்மேக நிறம்காரிருள்  வசப்படும், நீரின்  வேகம்  கூழாங்கல்  வசப்படும், மலை முகடின் உயரம் உளியின்  வசப்படும், வெண்பஞ்சு  காலம்  திரியின்  வசப்படும், சுட்டெரிக்கும்  அனல்காற்று  பருவமழை  வசப்படும், குளிர்பனி காலம்  கதிரவன்  வசப்படும், கனமான இதயம்  இறையருள்  வசப்படும், செல்வச்செருக்கு வள்ளல்  வசப்படும்,...

தேடல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை " தேடல்" என்பதை இயற்கையின் அடிப்படைத் தன்மையாகவும், உயிரின் அடையாளமாகவும் முன்வைக்கிறது. கதிரவன் முதல் உயிர் வரை அனைத்தும் தமக்கான நிறைவை, எல்லையை அல்லது விடுதலையை நோக்கி இடையறாது பயணிக்கின்றன. அந்த தேடல் வெளிப்படையான இலக்கை அடைவதற்கல்ல: கரைதல், இளைப்பாறு, அனுமதி போன்ற உள்ளார்ந்த நிலைகளை அடைவதற்கானது. கவிதையின் முடிவில் கூறப்படும்" காட்சிக்கு தென்படாதவை" என்பது தேடலின் உண்மையான நீளம் கண்களால் அளக்க முடியாதது: அது உணர்விலும் அனுபவத்திலும் மட்டுமே அறியப்படுவதாகும். இதன் முலம் மனித வாழ்க்கையின் அஸ்தித்வப் பயணமும் இயற்கையின் ஓட்டத்தோடு ஒப்பிடப்படுகிறது. கவிதை கதிரவனின்  தேடல்- நீலம் படிந்த கூரை தாழ்ந்து  மண்ணில் புதையும் வரை, காற்றின் தேடல்- சுவாசம் மறந்த நாடி இளைப்பாறும் வரை, கடலின் தேடல் - ஆழம் தடைப்படும் மண்குவியல் தோன்றும் வரை, பனியின் தேடல் - வெப்பம் சிதைக்கும் வெண்பாறை ஓடை காணும் வரை, நெருப்பின் தேடல் - செந்நிறம் மறைத்த காரிருள் வானில் படியும் வரை, வெப்பத்தின் தேடல் - உமிழ் தொலைத்த தாகம் நன்னீர் சேரும் வரை, அமைதியின் தேடல் - கலவரத்தின் நிழல...

முரண்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் தனது உடல், உணர்வு, காலம் மற்றும் உறவுகளுடன் எதிர்கொள்ளும் மாற்றங்களை அச்சமின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வெளிப்படுத்துகிறது. உயர்வு- தாழ்வு, இளமை- முதுமை, தனிமை- துணை போன்ற இருமைகளின் நடுவில் நின்றும், அகந்தை அல்லது தளர்வு இன்றி தொடரும் சுயநிலையே இதன் மைய சூழலாக அமைகிறது. ஒவ்வொரு செயல்பாடும் பயத்தின் மறுப்பாகவும், விழிப்புணர்வின் உறுதியாகவும் பதிவு செய்யப்படுகிறது. கவிதை தலைக்கனம்  மதிகெடுக்கும்  என   உச்சி நிமிர ஆராய்வதில்லை. இமைகள்  விடைப்பெறும் என     விழிகள் விழித்திருக்க  தயங்குவதில்லை. சுவாசத்தின்  பரிமாற்றம்  அழற்சி  தருமென , கண்களின்  நேர்கோடு  விலகுவதில்லை, நாவின்  உரசல்கள்  பிளவுபடும் என  உதடுகள்  பிரிந்திருக்க  அஞ்சுவதில்லை, ஒலியின்  நீளம் மிகினும், குறையினும்  துருவங்கள்  ஒன்றினைவதில்லை, கரங்களின் நேர்த்தியை முதுமை பின்தள்ளும்  என, விரல்கள்   நடுங்குவதில்லை, பாதங்களின்  அழுத்தத்தை கைத்துணை பகிர்ந்துகொள்ளு...

நிறம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை " நிறம்" என்பதை வெறும் கண்ணுக்குப் புலப்படும் தோற்றமாக அல்லாமல், இயற்கை, உயிர், காலம்,  இளமை, முதுமை ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு மௌன சக்தியாகப் பார்க்கிறது. மலர்கள், பசுமை, இரத்த ஒட்டம், கூந்தல், சூரியன் போன்ற  உவமைகள் மூலம் நிறம் வாழ்க்கையின் தொடர்ச்சி, பாதுகாப்பு, உயிர்ப்பாடு மற்றும் அமைதியான பயணம் என்பவற்றிறன்  ஆடையாளமாக வேளிப்படுகிறது. கவிதை நிறம் என்னும் மாயை, காற்றில் கரைந்திருக்க, இரகசியம் அறிந்த மலர்கள்  காற்றோடு உறவாடி, நிறமெனும் இயற்கை ஆபரணம் அணிந்து, வழிவழியாய் அழகின் மகுடம் சாயாமல் வீற்றிருக்கின்றன. பூமியின் கட்டுடல் தளறாமல் இருகப்பற்றி, சேவகனாய் கற்காலம் தொட்டு இன்று வரை கவசமாய், பசுமையாய் விழித்திருக்கும் வண்ணம் நிறத்தின்  தளபதி. உயிரின் தாகம்  தீர்க்க வற்றாது பாய்ந்தோடும் செந்நீர், செவ்வானம் நிறம் தொட்டு உடலெனும் கூட்டுக்குள் வளைந்து நெளிந்து வற்றாது சப்தமின்றி பயனிக்கும். இளமை என்னும கருங்கூந்தல் வெந்நிற  முதுமைக்குள் ஒளிந்திருப்பதைப் போல, நிறத்தின் உவமைகள் கைக்குள் அடங்காதவை- கதிரவனின் ஒற்றைக் குட...