நிழல்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் உள் நிழலைப் பற்றி பேசுகிறது. தடுமாற்றம், பிழை, இருள், மனக்குழப்பம் ஆகிய தருணங்களில் அது காவலாய், வேலியாய் கைகொடுக்கும் சக்தியாக செயல்படுகிறது. நினைவுகள் இருளை சூழ்ந்தாலும், அவை நிலைத்தவை அல்ல: நொடி பொழுதில் கரைந்து போகும் நிலையற்ற உண்மையென கவிதை நம்பிக்கையுடன் முடிகிறது. கவிதை நிழல் தாங்கும் பாரம் நிஜங்களின் எல்லைக்குள் பயணிக்கும் வரை எட்டி நின்று காவல்காக்கும் பிழை பொறுத்து கண்களின் காட்சி தடுமாறும் வேகத்தில் பாதை சீர் பெறும்வரை வேலியாய் பின் தொடரும் மனம் தடுமாறி நடை தடம் மாறி வெறுமையான காட்சிகளின் எதிரில் நின்று கைகொடுக்கும் நிலம் சூழ்ந்த இருள் நினைவிலும் தொடர்ந்து வர நொடி பொழுதும் தாமதமில்லாமல் கரைந்தே போய்விடும்.