இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இரு

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இயற்கை, மனித சமூகம், மனம், காலம் ஆகிய அனைத்திலும் இயல்பாக இனைந்து வாழும் இரட்டைத்தன்மைகளை(  இருள்- ஒளி, நன்மை- தீமை, அன்பு- பகை, பிறப்பு- இறப்பு) தத்துவ  ரீதியாக ஆராய்கிறது. எதிர்மறைகள் ஒன்றுக்கொன்று எதிராக அல்ல: ஒரே பயணத்தின் இணைநடப்பாளர்கள் என்ற பார்வையை முன் வைக்கிறது. நொடிகள் ஓடிக்கொண்டே இருந்தாலும், அந்த ஓட்டத்திற்குள் மனிதன் தேடும் ஓய்வு, அர்த்தம், சமநிலை ஆகியவற்றை கவிதை சுட்டிக்காட்டுகிறது. கவிதை இயற்கையின் வசிப்பிடத்தில் இரவும் பகலும், முகம்காட்டா விருந்தினர்கள். கதிரவனின் தாகம் தீர்க்கும் அடர்ந்த கோப்பைக்குள் இருளும் வெளிச்சமும், விண்வெளி சாயல்கள். இறைவன் காணும் நடைப்பாதையில் நன்மையும் தீமையும், கைகோர்க்கும் வழிபோக்கர்கள். மனிதன் ஆளும் சமூகத்திற்குள் அன்பும் பகையும், ஓயாமல் அசையும் ஊஞ்சல்கள். மதி வளர்த்த கணிதத்தில் ஒன்றும் நூறும், துணை விரும்பா ஆற்றல்கள். வெளிச்சத்தில் கண்விழித்தும், இரவில் கண்ணசரும் பயணத்தில் பிறப்பும் இறப்பும், சலிப்பில்லா மரபு சூழற்சிகள். மனம் புதைந்த உயிர் வட்டத்திற்குள் இன்பமும் துன்பமும், வெற்றிடம் கண்காணிக்கும் உளவாளிகள்...

நினைவுகள்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனத்தின் அனுமதி- மறுப்பு, உணர்வுகளின் நுழைவாயில், நினைவுகளின் சுழற்சி, மற்றும் மனிதன் உலகில் பதிக்கும் தடத்தின் தத்துவத்தை பேசுகிறது.  முகவரி இல்லாத எண்ணங்கள், அனுமதி பெறாத உணர்ச்சிகள் கோபமாக மாறும் விதம், மென்மையை உணரத் தெரிந்த பாதங்களுக்கும், காலச் செருக்கில் கரடுமுரடாகிய பாதங்களுக்கும் இடையிலான வேறுபாடு இங்கு வெளிப்படுகிறது. இயற்கையின் வடிவமைப்பில் மனிதன் பதிக்கும் கால் சுவடுகள் உலகின் சமநிலையைச் சிதைக்காமல், மாறாக இரு துருவங்களையும் இணைத்து கேட்க முடியாத இன்னிசையோடு அண்டம் நடனமாடும் என்ற தத்துவ உணர்வை கவிதை எடுத்துரைக்கிறது. கவிதை முகவரி இல்லாத வரிகளின் தொகுப்பு- மனதிற்கு மட்டும் புலப்படும் சம்பவங்களின் அணிவகுப்பு. மனதின் அனுமதி பெற்று, இதய வாசலில் நுழைய காத்திருக்கும் பயணச்சீட்டு, அனுமதி இல்லாததால் கோபத்தணலில் வெளியேறும் வன்மங்கள். இதழின் மென்மையை உணரும் பாதங்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலின் வெளிப்பாடு., காலச்செருக்கில் முட்களை பதம்பார்த்த பாதங்கள், நினைவெனும் காலச்சுழற்சியை அனுபவிக்க தகுதியற்றவை. உலகின் வடிவம் இயற்கை சார்ந்தது என்றாலும் உயிராய...

புதுமை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை, இயற்கையின் முரண்களில் மறைந்திருக்கும் அற்புதங்களை வெளிப்படுத்துகிறது. ஆழ்கடல்- அமைதி, பாலைவனம்- பசுமரம், மௌனம்- முழக்கம் போன்ற எதிர்மறை நிலைகளின் சங்கமம் மூலம் உயிர், உணர்வு, சுவாசம், தாகம் ஆகியவை ஒரே மேடையில் நிகழும் புதுமைகளாகக் காட்சியளிக்கின்றன. மனிதன் மொழியால் வரையறுக்க முடியாத அழகுகள், இயற்கையின் அரங்கில் இயல்பாகவே அரங்கேறுகின்றன என்பதே கவிதையின் மைய உணர்வு. கவிதை ஆழ்கடல்    மிதக்கும் அமைதி, முழு நிலவில் தும்பையின் பிரவேசம், ஓலையின் வரிசையில் கண்சிமிட்டும் கதிர்கள், மௌனத்தின் துணைசேரும் வெண்சங்கு முழக்கம், நீர் சுரக்கும் கருவறையில் காற்றின் வெற்றிடம், பட்டின் இழை தாங்கிய மேலாடை, பாலையில் நீர்சுரக்கும் பசுமரம், பனிகாட்டில் தத்தி நடக்கும் உயிரோவியம், காற்றருவியில் சுவாசம் பதித்த  மூலிகைகள், நேர்திசை மறவா மழைத்துளி பயணம், மலர்கள் சுவைத்திடாத தேன் விருந்து, துகள் வென்ற வெப்பத்தின் பெண் ஆபரணம், கடல் தணிக்காத நன்னீர் தாகம், இலக்கில்லா வட்டத்துக்குள் இரைதேடும் தீச்சுடர், நடுநிசையில்  துயிலுரியும் மலரினம், எழுத்துக்களின் வரையரைக்குள் தென்படாத அ...