இடுகைகள்

கனம்

படம்
ஈரம் மறுத்த வளம் சுவாசத்தின் சுமை, கனி விரும்பா கொடியினம் நாவிற்கு சுமை, இதழ் சுருங்கிய மலர்கள் அழகிற்கு சுமை, இருள் அணைத்த மின்விளக்கு விழிப்பதற்கு சுமை, கிளைகளின் குடியிருப்பில் புயலின் வரவேற்பு சுமை, நீர்  பருகிய நிலம் வறட்சியின் சுமை, முகில் ஊடுருவும் பயணத்தில் நிலம் தாங்கும் உயிர்கள் சுமை, பண்பட்ட இதயம் ஊடலில் சுமை, மௌனம் கலைத்த விழிநீர் இரகசியத்தின் சுமை, இரவில் விழித்திருக்கும் நினைவுகள் நிம்மதியின் சுமை, கற்பனையின் அலைவரிசையில் மெய் வருடும் நுனிவிரல் சுமை, நிசப்தம் உறங்கும் நிலத்தில் முகவரி தேடும் காற்றொரு சுமை, கைவலையின் கலகலப்பில் மழலையின் நித்திரை சுமை, முகம் மலர திரையிட்ட காலங்களால் பிறவியும் சுமை. ஆற்றாமையின் துணையில் நிழல் சாய்வதும் சுமை- அழைத்துச் செல்ல  வலிமையில்லை பின்தள்ள புரிதலுமில்லை..

அணங்கு

படம்
உள்ளடக்கம் " அணங்கு"  என்னும் சொல் சங்க இலக்கியத்தில் பெண்ணைக்  குறிப்பதாகும். ஒரு தாயின் இதயத்தில் பிறந்த இக்கவிதை தன் மகளை  ஒளியாய், இனிமையாய், கருணையாய் காணும் உணர்வை வெளிப்படுத்துகிறது. மழலை சிரிப்பிலும், சிறு செயல்களிலும் வாழ்க்கையின் உண்மைமயான அர்த்தத்தை காணும் தாயின் பயணம் இது. கவிதை மின் மினியின் மகளாய் ஒளி பகிர்ந்து தந்தாய், தேனீக்களின் அரசியாய் சுவை உணர வைத்தாய், முத்தமிழின் மூத்தவளாய் மன்றம் ஏற்க வந்தாய், குழலின் மொழியாய் செவி சுவைக்க நின்றாய், கொடியின் இடையாய் பருவம் ஏற்று மலர்ந்தாய், மீன் வடித்த விழியாய் கருணை கற்று வளர்ந்தாய், மகிழ்ச்சியின் சாமரம் வீசி அகம் குளிர்வித்தாய், உருவமாய் எனை வளர்த்த என் உயிர் துடிப்பில்  கண் அயர்ந்து, என்  மூச்சில் குளிர் காய்ந்து, உன் தவம் கலைத்து என் பார்வையின் நிழலில், நீ அறிந்ததை மழலை மொழியில் விளக்க துடித்தாய், சுவையின் இலக்கணமாய் நாவில் தவழ்ந்த  இசையயை மெய் மறந்து ஆற்றலானேன். பிறவி ஏழும் பொய்யானது உறவின் தாகம் தணியாமல்:  முடிவுரையின்  தொடக்கமாய் உதித்தாய் கடந்த காலங்களின் சுமை விலகி முழுமையடைந்தேன். ...

பெண்ணெனும் நான்........

படம்
நாட்குறிப்பு பெண் என்னும் அகராதி சாபத்திற்குள் அகப்பட்ட வரம். பிறந்ந பாதையில் வரங்கள் பின்தொடர்வதுமில்லை, சாபங்கள் வழி மறுப்பபதுமில்லை. நிழலை உற்று நோக்கும் கனம், தனிமை முழுவதுமாய் ஆட்கொண்டிருக்கும். தனிமையில் இரவுக்கும், வெளிச்சத்திற்கும் வேறுபாடில்லை. உணர்வுகளின் துணைக்கொண்ட ஆற்றலின் வடிவம் சிகரம் கடந்து செல்லும். வழித்துணையின் பல்லக்கு அயராமல் சுமந்தாலும் இளைப்பாற ஒரு அடியேனும் தனக்கென பகிர்ந்திருக்க வேண்டும். உபயம் சேர்க்கும் கற்சிலையாய் ஊர்வதை கடந்து, உளி செதுக்கிய பெண் உருவமாய் நகர்வது சிறப்பு. எண்ணங்களின் அலைவரிசை மனதின் இசையாய் வெளிப்பட, பாதங்கள் வண்ணத்தில் நனைந்திருக்க வேண்டும். இருளில் நிறம் மறைந்தாலும் செவிகள் இன்புற்று கடந்து செல்லும். நான் படைத்த " பெண்ணெனும் நான்" உணரவிருக்கும் காலத்தின் பரிணாமங்கள்... கவிதை கருவறை கோப்பைக்குள் உயிரெனும் ஆற்றலோடு வடிவமில்லா சிறுதுகளாய் அங்கும், இங்கும் அலைந்து ஓரிடத்தில் இளைப்பாறினேன். இயற்கை வரமளித்த இரு இனங்களின் ஒரு இனமாய், காற்றும், செந்நீரும் ஒரு சேர கலந்து கருவண்ணம் ஆட் கொண்ட  அறையில்,சலனமில்லாமல் வீற்றிருந்தேன...

அறியாதது

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை வாழ்க்கையின் பல பரிணாமங்களை ஆழமாக ஆராயும் தத்துவப் பயணமாகும். மண், மழை, விதி, காற்று, வானவில், போன்ற இயற்கை உருவகங்களின் மூலம் மனிதன் அனுபவிக்கும் உணர்வுகள், உறவுகள், உண்மை, துரோகம், நினைவுகள் ஆகியவை வெளிப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதை உணரும் தனித்தன்மை இருக்கிறது என்ற கருத்தை கவிதை வலியுறுத்துகிறது. இறுதியில் மனிதன் அறிந்ததாக நினைப்பது எல்லாம் அறியாமையின் தொடக்கமே என்றும், விழித்திருந்தாலும் முழு பார்வை இல்லாத நிலையிலேயே வாழ்கிறான் என்றும் ஒரு ஆழமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. கவிதை மண் புழுதியின் ஏக்கம் மழை சாரல் அறியும். விண்கல் பயணம் ஆழ்துளை அறியும். விழுதுகள் படரும் நேரம் விதி அறியும். பிறப்பின் காலம் வம்சம் அறியும். எண்ணங்கள் அசைபோடும் வேகம் காற்று  அறியும். உயிர்தூறல்  எதுவரை வாழ்நாள் அறியும். நிறங்களின் ஆயுட்காலம் வானவில் அறியும். உண்மை இடறிய கணம் துரோகம் அறியும். நிலையில்லா நிலத்தின் அகந்தை கல்தூண் அறியும். கடந்த காலத்தின் சுமை வரும்காலம் அறியும். வீரத்தின் வலிமை மகுடம் அறியும். புலமை புகுந்த வரிகள் மொழி அறியும். உறவில் பதிந்த கீறல்கள...

தூண்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை,' துணிவு' என்ற கருத்தை பல அடுக்குகளில் வெளிப்படுத்துகிறது. இரவின் அமைதியிலும்  அச்சத்திலும் உயிரை தாங்கி நிற்கும் தனிநபர் மனநிலையிலிருந்து தொடங்கி, போராட்டங்களிலும் வரலாற்றிலும் சிறு செயல்கள் பெரிய மாற்றங்களை உருவாக்கும் சக்தியாக மாறுகிறது. மனித அகந்தைக்கும் சமீக நீதிக்கும் எதிராக நிற்கும் மன வலிமை, பெண்களின் சுதந்திரக் குரல், முன்னோடிகளின் பாதையில் மீண்டும் எழும் புத்துயிர் - இவை அனைத்திலும் துணிவு ஒரு தொடர்ந்த உயிர்ப்பாகவும் படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனிதனின்  தனிப்பட்ட தைரியம் அல்ல: மாறாக உயிரின் இயல்பாகவும், சமூக மாற்றத்தின் வேராகவும் இந்தக் கவிதை துணிவை காட்டுகிறது. கவிதை காற்றசையா வீதிகளில் இறகின் சுவாசம் நுகர்ந்து முகில் நெய்த கூரையில், இரவின் காவல் கண்களை மறைக்க உயிர் சுமப்பது துணிவு. துயில் ஆளும் ராத்திரியில் தரைப் படையின் மௌனத்தில் இருளின் அச்சம் கடந்து சிறு பொறி நிலமாளும்  வரலாற்றின் நம்பிக்கை- துணிவு. நீர் தழையும் நிலத்தில் இனம் காக்க  எல்லை  வகுத்து,  நிலம் செரித்து படையெடுக்கும் அகந்தை மாறா மனிதர்களின் தடை வளர்ப்பது த...

முடிவுரை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்வின் ஆழமான வெற்றிடத்தையும், நிறைவேறாத ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.காலம் நகர்ந்தும் வாழ்க்கையின் அர்த்தம் தெளிவாக தெரியாமல் போகும்  ஓரு நிலையை இது காட்டுகிறது. வானம் விரிந்திருந்தாலும் அதன் எல்லை கண்களுக்கு எட்டாதது போல, மனிதன் தேடும் நிறைவு எளிதில் கிடைக்காததாகவே உள்ளது. மேகம் கரைந்து மழையாக  விழுந்தாலும் மண்ணின்  தாகம்  தீராதது போல வாழ்க்கையில் நிகழ்வுகள் பல வந்தாலும் உள்ளத்தின் பசி அடங்காமல் தொடர்கிறது. வெளிப்படையாக இயற்கை இயக்கம் நடைப்பெறுகிறது போல தோன்றினாலும் உள்ளார்ந்த வெறுமை நீங்காத ஒரு அமைதியான வேதனை இந்தக் கவிதையின் மைய உணர்வாக உள்ளது. இது தனிமை, தேடல் மற்றும் நிறைவை நாடும் மனித மனத்தின் நிலையை நுட்பமாக பிரதிபலிக்கிறது. கவிதை முடிவுற்ற காலங்கள் விழித்திருந்தும் வானின் நீளம் தென்படவில்லை. மேகம் கரைந்த நீர்துளிகள் சிந்தியும் மண்ணின் தாகம் தீர்க்கப்படவில்லை. நிலம் இருகிய பாறைகள் குடைந்தும் பூமியின் புதிர் விடுபடவில்லை. பிறவிகள் ஏழு கடந்தும் சூரியனின் கதிர்கள் குன்றியதில்லை. நொடியின்  இடையில் இமை மூடும் விழிகள் கரைந்தாலு...

உருவம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை காற்றைப் போல கண்ணுக்குப் புலப்படாமல் உடலுக்குள் மறைந்திருந்து, படைத்தவனின் ஆனையேற்று, காலம் முடியும் வரை பயணிக்கும் உருவமில்லா உயிர் சேர்ந்தது. உயிர் உடலில் மறைந்திருக்கும் வரை நல்லாற்றலாய் செயல்பட வேண்டும் என்பதை மாசற்ற சூரியனின் ஒளியில் ஒரு துளியும் கலங்கம் சேர்க்காமலும், உப்பு கலந்த கடல் நீரிலும்  நன்னீரின் சுவை உணர்வதும், காற்று கலந்த பூமியில் என் சுவாசம் மட்டும் புதியதாய் தென்பட வேண்டும் என்னும் இயல்பையும்  ,ஐம்புலனும் உயிருக்குள் கட்டுப்பட்டு நன்மை தீமைகளை பிரித்து உணரவேண்டும் என்பதையும்,வானம் சூழ்ந்த நிலத்திற்குள் தீயவை தீண்டாத இருப்பிடத்தில்  வசிப்பதையும் கடைப்பிடிக்க, பிறப்பில்  நீர் சூழ்ந்த உடல் இறுதி காலத்திற்கு பின் மண்ணில் புதையுண்டு மறையும் வரை காற்றடைத்த உடலில் அமைதி காக்க வேண்டும் என்னும் பொருள் கொண்டு   "உருவம்"  கவிதை படைத்தது. கவிதை காற்றின் வம்சமாய், புதராடும் கூட்டுக்குள், கண்ணிருண்ட உருவமாய், சிந்தித்தவனின் சிரம் பற்றி, காலத்தின் கணக்கில் அடிபணிந்து, உயிரென உடல் சேர்ந்தாய். சுடர் விரியும் நன்பொழுதில், ஒரு த...