இடுகைகள்

# மொன மொழி கவிதை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மௌனம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மௌனத்தின் ஆழ்ந்த இருப்பை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. பார்வைக்குள் சிக்கிய நினைவுகள், வெளிப்பட முடியாத உணர்வுகள், சொற்களாக மாற மறுக்கும் வலி- இவை் மௌனத்தின் வழியாக வெளியில் செல்லும் நிலையை கவிதை காட்டுகிறது. கவிதை பார்வைக்குள் அகப்பட்ட  நினைவுகள் மனம் ஈர்க்காமல், தன் நிலை பகிராமல் வெளியேறும் வாசல்- மௌனம். உணர்வுகள் சிதைத்த வரிகள் உதடுகளின் உரசல்கள் கடந்து,சலனமில்லாமல் வெளியேறும் மொழி- மௌனம். அலையாய் நடை பழகும் சப்தம் தடை தகர்த்தால் நிலையான நிசப்தம் உள்வாங்கிவிடும். புயல் வசிக்கும் கூட்டுக்குள்,இடராமல் இமை  தோகை விரித்து காட்சிக்கு முரண்படாமல் வசிப்பது மௌனம். வெற்றியின் சாரல் புயல் மழையாய் கடந்தாலும் தனிமையின் தேடலில் புலன்கள் ஒன்றிணைய நிழலாய் தொடர்ந்து என்னுள் புதைந்திருப்பது- மௌனம்.