உடமை
உள்ளடக்கம்
கவிதை "நான், " என்ற சொல்லின் ஆழமான தேடல். இது தனிப்பட்ட அகந்தை அல்ல: இயற்கை, உழைப்பு, பக்தி, தாய்மை, வயது, விதி, விடுதலை அனைத்தையும் தன்னுள் ஏற்றுக்கொள்ளும் முழுமையான மனித அடையாளம்.
கவிதை
மழை பொய்த்த பூமியின்
தாகம் எனது,
நிலம் உழுத வேர்வையின்
பசுமை எனது,
வண்ணம் சூடிய இயற்கையின்
கலை எனது,
தென்றல் உரசிய கரங்களின்
இசை எனது,
இறை கலந்த தியானத்தின்
பக்தி எனது,
பயணத்தின் முடிவுறை எழுதும்
முதுமை எனது,
புதைமண் வடிவம் காணும்
ஆற்றல் எனது,
மடி தவழும் மழலையின்
தாய்மை எனது,
மனம் இசைந்து இமைகள் சந்திக்கும்
தாலாட்டு எனது,
விதி சுமந்து வையகம் வாழும்
பிறப்பு எனது,
துயில் கலைத்த சிறையின்
சுதந்திரம் எனது,
" நாம்" கலைந்து " நான்" சேரும்
Lovely
பதிலளிநீக்குGood one
பதிலளிநீக்கு