இடுகைகள்

இரு

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இயற்கை, மனித சமூகம், மனம், காலம் ஆகிய அனைத்திலும் இயல்பாக இனைந்து வாழும் இரட்டைத்தன்மைகளை(  இருள்- ஒளி, நன்மை- தீமை, அன்பு- பகை, பிறப்பு- இறப்பு) தத்துவ  ரீதியாக ஆராய்கிறது. எதிர்மறைகள் ஒன்றுக்கொன்று எதிராக அல்ல: ஒரே பயணத்தின் இணைநடப்பாளர்கள் என்ற பார்வையை முன் வைக்கிறது. நொடிகள் ஓடிக்கொண்டே இருந்தாலும், அந்த ஓட்டத்திற்குள் மனிதன் தேடும் ஓய்வு, அர்த்தம், சமநிலை ஆகியவற்றை கவிதை சுட்டிக்காட்டுகிறது. கவிதை இயற்கையின் வசிப்பிடத்தில் இரவும் பகலும், முகம்காட்டா விருந்தினர்கள். கதிரவனின் தாகம் தீர்க்கும் அடர்ந்த கோப்பைக்குள் இருளும் வெளிச்சமும், விண்வெளி சாயல்கள். இறைவன் காணும் நடைப்பாதையில் நன்மையும் தீமையும், கைகோர்க்கும் வழிபோக்கர்கள். மனிதன் ஆளும் சமூகத்திற்குள் அன்பும் பகையும், ஓயாமல் அசையும் ஊஞ்சல்கள். மதி வளர்த்த கணிதத்தில் ஒன்றும் நூறும், துணை விரும்பா ஆற்றல்கள். வெளிச்சத்தில் கண்விழித்தும், இரவில் கண்ணசரும் பயணத்தில் பிறப்பும் இறப்பும், சலிப்பில்லா மரபு சூழற்சிகள். மனம் புதைந்த உயிர் வட்டத்திற்குள் இன்பமும் துன்பமும், வெற்றிடம் கண்காணிக்கும் உளவாளிகள்...

நினைவுகள்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனத்தின் அனுமதி- மறுப்பு, உணர்வுகளின் நுழைவாயில், நினைவுகளின் சுழற்சி, மற்றும் மனிதன் உலகில் பதிக்கும் தடத்தின் தத்துவத்தை பேசுகிறது.  முகவரி இல்லாத எண்ணங்கள், அனுமதி பெறாத உணர்ச்சிகள் கோபமாக மாறும் விதம், மென்மையை உணரத் தெரிந்த பாதங்களுக்கும், காலச் செருக்கில் கரடுமுரடாகிய பாதங்களுக்கும் இடையிலான வேறுபாடு இங்கு வெளிப்படுகிறது. இயற்கையின் வடிவமைப்பில் மனிதன் பதிக்கும் கால் சுவடுகள் உலகின் சமநிலையைச் சிதைக்காமல், மாறாக இரு துருவங்களையும் இணைத்து கேட்க முடியாத இன்னிசையோடு அண்டம் நடனமாடும் என்ற தத்துவ உணர்வை கவிதை எடுத்துரைக்கிறது. கவிதை முகவரி இல்லாத வரிகளின் தொகுப்பு- மனதிற்கு மட்டும் புலப்படும் சம்பவங்களின் அணிவகுப்பு. மனதின் அனுமதி பெற்று, இதய வாசலில் நுழைய காத்திருக்கும் பயணச்சீட்டு, அனுமதி இல்லாததால் கோபத்தணலில் வெளியேறும் வன்மங்கள். இதழின் மென்மையை உணரும் பாதங்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலின் வெளிப்பாடு., காலச்செருக்கில் முட்களை பதம்பார்த்த பாதங்கள், நினைவெனும் காலச்சுழற்சியை அனுபவிக்க தகுதியற்றவை. உலகின் வடிவம் இயற்கை சார்ந்தது என்றாலும் உயிராய...

புதுமை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை, இயற்கையின் முரண்களில் மறைந்திருக்கும் அற்புதங்களை வெளிப்படுத்துகிறது. ஆழ்கடல்- அமைதி, பாலைவனம்- பசுமரம், மௌனம்- முழக்கம் போன்ற எதிர்மறை நிலைகளின் சங்கமம் மூலம் உயிர், உணர்வு, சுவாசம், தாகம் ஆகியவை ஒரே மேடையில் நிகழும் புதுமைகளாகக் காட்சியளிக்கின்றன. மனிதன் மொழியால் வரையறுக்க முடியாத அழகுகள், இயற்கையின் அரங்கில் இயல்பாகவே அரங்கேறுகின்றன என்பதே கவிதையின் மைய உணர்வு. கவிதை ஆழ்கடல்    மிதக்கும் அமைதி, முழு நிலவில் தும்பையின் பிரவேசம், ஓலையின் வரிசையில் கண்சிமிட்டும் கதிர்கள், மௌனத்தின் துணைசேரும் வெண்சங்கு முழக்கம், நீர் சுரக்கும் கருவறையில் காற்றின் வெற்றிடம், பட்டின் இழை தாங்கிய மேலாடை, பாலையில் நீர்சுரக்கும் பசுமரம், பனிகாட்டில் தத்தி நடக்கும் உயிரோவியம், காற்றருவியில் சுவாசம் பதித்த  மூலிகைகள், நேர்திசை மறவா மழைத்துளி பயணம், மலர்கள் சுவைத்திடாத தேன் விருந்து, துகள் வென்ற வெப்பத்தின் பெண் ஆபரணம், கடல் தணிக்காத நன்னீர் தாகம், இலக்கில்லா வட்டத்துக்குள் இரைதேடும் தீச்சுடர், நடுநிசையில்  துயிலுரியும் மலரினம், எழுத்துக்களின் வரையரைக்குள் தென்படாத அ...

நான் உணர்ந்த தலைவன்

படம்
  உள்ளடக்கம் இந்தக் கவிதை தியாகம், தவம் நேர்மை ஆகியவற்றின் வழியே உருவாகும் ஒரு நவீன தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. அதிகாரம் அல்ல பொறுப்பு என்பதே உண்மையான  தலைமை எனக் கூறும் கவிதை. கவிதை தவம் கலைத்த இந்தியத் தாயின் தலைமகனுக்கு... வாய்மை வழித்துணையானதால் வறுமை பிழையில்லை என திலகம் தொலைத்த  நெற்றியில் தன் விருப்பம் சுருங்கி தியாகம் விழியில் ஒளிவீச - மூன்று புறமும் நீர்சூழ்ந்த நிலமாளும் சுடர் தென்பட்டதால் உடல் வருத்தி, பாதை வகுத்தாய் மனை துறந்து மானுடம் காக்க. வடக்கில் தடம் வலுத்த பாதம் தென்தேசத்தில் கம்பன் நிலம் படர்ந்ததால், காலம் சுமந்த பாரதம் மீண்டும் புத்துயிர் பெற, சுதந்திரத்தின் நூற்றாண்டில் வாகை சூடி, உலகம் புகழும் உத்தம தலைவனாய், யோகம் வளர்த்த உடல் மெருகேறி வையகம் போற்றும் எங்களுள் ஒருவனாய் வாழும் ஆரவாரத்திற்கு குறைவில்லை, தலைமையில் மாற்றமில்லை. உன் நேர் பார்வையில் கண்டமும் கதைசொல்லும் மனிதத்தின் புகழ் ஓங்கும். பெண்ணின் துயரம் உன் தோல் சேர்ந்ததால் கருணையையே காரியமாக்கி தாயானாய். தேசத்தின் பாதுகாப்பிலும், நிதி பகிர்விலும் பெண்கரம் வலுத்ததால் தந்தையுமானாய். சைவமும் வ...

இலக்கு

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இருள்- ஒளி, வறுமை- அதிகாரம், அமைதி- அதிக சப்தம், இயற்கை- மனித அறிவு ஆகிய எதிர்மறை நிலைகளுக்கிடையே மனித மனம் மேற்கொள்ளும் அமைதியான தேடல் பயணத்தை  பேசுகிறது. கவிதை இரவின் மணித்துளிக்குள் ஒளியின் நொடி தேடும் விழிகள். குடைந்த பாறைக்குள் தாகம் தீர்க்க நினைக்கும் மனம். நிலவு சேர்த்த பகலில் ஈரம் காயும் புல்வெளி. வறுமை புதைந்த நிலத்தில் பகட்டின் கனி சுவைக்கும்  அதிகாரம். அடர்ந்த கானகத்துள் விதை தேடும் விலங்கினம். பறவையின் இறகில் உலகம் அளக்கும் விஞ்ஞானம். ஆழ்கடலின் அலையோசையில் மௌன மொழி பேசும் மீன்கள். செம்மொழியின் நிலப்பரப்பில் புதியதோர் அத்யாயம். மண் புதைத்த உறைவிடத்தில் காற்று தீண்டா தீபச்சுடர். இனம் தோற்ற வைகரையில் மாசில்லா வெண்மலர் கூட்டம் அமைதியின் பயணம் நோக்கி இதழ்விரித்து புன்னகைக்கிறது.

நோக்கம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இயற்கை, மனிதன், காலம் மற்றும் வாழ்க்கை ஆகிய அனைத்தும் எதை நோக்கி நகர்கின்றன என்ற அடிப்படை தத்துவக் கேள்வியை முன்வைக்கிறது. கவிதை வானம் போர்த்திய நிலமும் போர்வை துளைத்த நட்சத்திரங்களும் எதை நோக்கி.. மண் கலந்த வாசமும் மழையறியா விரிசல் நிலமும் எதை நோக்கி.. வெப்பம்  ஈன்ற தீப்பொறியும் தாவரம் தழைக்காத வெண்ணிற பூமியும் எதை நோக்கி.. பிறப்பு சுமக்கும் இரகசியமும் முடிவரியா பயணத்தின் தொடர்கதையும் எதை நோக்கி.. சூரியன் மறைந்த நல்லிரவும் வெளிச்சம் பரிமாறும் நில வொளியும் எதை நோக்கி.. பற்றில்லா புறம் காணும் துறவும் ஆசையின் பொதி சுமக்கும் மானிடமும் எதை நோக்கி.. சமூகம் வரைந்திடாத ஓவியமும் வண்ணம் தீட்ட பாயும் கரங்களும் எதை நோக்கி.. இரு விழிகளின் காட்சியும் ஆயுள் மறந்த பூமி சுழள்வதை நோக்கி..

பயணம்

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் இயற்கையுடன் மேற்கொள்ளும் பயணத்தைச் சொல்லும் ஒரு உணர்வுப் பதிவு. பூமி மனிதனுக்குச் சொல்வது ஒன்று மட்டுமே- நாம் உரிமையாளர்கள் அல்ல: விருந்தினர்கள். கவிதை பாதங்கள் இளைப்பாற விழிகள் மட்டும் விழித்திருக்க கிழக்கும்,மேற்கும் ஒரு சேர வரவேற்க, மேகங்கள் வெண் கம்பளம் விரிக்க காற்றும் இலை தழைகளும் சாமரம் வீச, யுகங்களாய் முதுமை தழுவாத பூமி பெண்ணின்  இருப்பிடம் காணும் முனைப்புடன் ஒரு பயணம். பச்சை நிலப்பரப்பில் நிறங்கள் ஏழு வண்ணம் தீட்ட, சாரல் மழை  சந்ததி வளர்க்க, செழுத்திருக்கும் பசுமை கூட்டுக்குள் அனுமதியின்றி கால் பதித்ததால் செந்நிற சீற்றத்துடன், தலைவிரிக் கோலமாய் நில மகள் தன்னைத் தானே அழித்த சுவடுகள், அச்சுருத்தும் நிஜங்கள். விண்கற்களின் உயிர் நடுங்கும் ஒலி பூமியின் சமநிலை குன்றியதால் இயற்கையின் சுற்றத்தார் விடுக்கும் எச்சரிக்கை. நிலத்தின்  மூதாதையர் வாழும் நீல போர்வைக்குள் புதைந்திருக்கும் மர்மங்களை கட்டவிழ்க்க முற்பட்டதால் பேரலை என்னும் பேரிடரால் மனித கூட்டம் வாழ்வை இழந்தது. விதிக்கப்பட்ட எல்லைக்குள் விருந்தினராய் அகம் மகிழ்ந்து வா...