இடுகைகள்

புதல்

படம்
புதல் உள்ளடக்கம் 'புதல்' என்னும் சொல் புதுமையை குறிப்பதாகும். பழமையின் தேக்கத்தில் புதுமையின் வாசம் ஏற்புடையது. உயிர் கலந்த இயற்கையில் திரை விலகும் ஒப்பனைகள் யாவும் புதிதானவை. விடியும் பொழுதும், பொழுதின் நிறைவும், நிறையின் காட்சிகளும், காட்சிகளின் படிப்பினைகளும், படிப்பின் நெறிகளும், நெறி குன்றா விதிகளும், விதியில் கலந்த உறவுகளும், உறவில் ஒன்றினணந்த  கனவுகளும், கனவின் விழும்பில் பயணங்களும், பயணத்தின் முடிவில் புதிய அத்யாயமும்,புதுமையின் வரிசையில் முதன்மையானவை. கவிதை வெண்மேக சங்கமத்தில் வானவில் புதியது. இருள் தோற்ற பௌர்ணமியில் தூறல்கள் புதியது. சுழன்றோடும் காற்றுக்கு நளினம் புதியது. நிலம் உரைந்த பருவத்தில் மொட்டவிழ்ந்த பூக்கள் புதியது. இரவு நுழையா விழித்திரையில் கனவுகளின் காட்சி புதியது. பிணி பொருத்த செம்மண் வீதியில் வாழையின் செழுமை புதியது. வண்டாடும் பூஞ்சோலையில் நிறம் விழுங்கிய மலர்கள் புதியது. கவிஞன் தொடுத்த உயிர்மெய்யில் ஆயுதம் புதியது. இடறிய மணித்துளிக்குள் காலத்தோடு எழுவது புதியது. செவித்திகட்டா  வாய்மையின் அமைதி புதியது. உறவின் பாலம் கட்டவிழ்ந்தும் மனதில் இணைந்திருப்பது ...

இணைப்பு

படம்
இணைப்பு மனம் அறியா மலருக்குள் கதிரவன் கண்சிமிட்டும் பந்நிற குவியல்கள். திசை   அறியா காற்றுக்கு நிலம் ஆளும் பூமியில் எதிர்வினையற்ற அதிகாரம். வரையரையில்லா கடலுக்கு வான் உதிர்த்த நன்னீரில் அலைகளின் அரங்கேற்றம். காற்றில் மிதக்கும்  பறவைக்கு நிலம் மூழ்கும் பேரலையின் இரகசிய விண்ணப்பம். மீன் வடித்த விழித்தோகைக்குள் அகன்ற பூமியின் காட்சி கூடாரம். சிதறிய வண்ணங்களின் தொகுப்பில் வானுயர மகுடம் சூடும் வானவில். உறைவிடம் இல்லா உடலுக்குள், உயிர் சாய்க்கும் சுமைகள் தாங்கும்  மெல்லிய மனது. நிலையில்லா உறவுக்குள் நிழல் தேடி, வேரூன்ற நினைக்கும் வாழ்க்கை பயணம். பயணங்கள் தொடர, முன்னுரை வரையும் காலச் சக்கரம், முடிவுரை தேடி, இரவு பகல் வட்டமிடுகின்றன.

வறுமை

படம்
வறுமை  உள்ளடக்கம் இந்தக் கவிதை, வறுமையை ஒரு பொருளாதார நிலையாக அல்லாமல், மனித உடல், உயிர், சுவாசம், காலம் மற்றும் சமூக அடுக்குகள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும் முழுமையான அனுபவமாகப் பதிவு செய்கிறது. வாய்ப்புகள் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் சமூக வாசல்கள், அடிப்படை தேவைகளே அடைப்பாக மாறும் வாழ்வியல் சூழல், உயிர் காக்க வேண்டிய ஆதிமூல சக்திகள் உயிர் கெடுக்கும் பசியாக உருமாறும் நிலை ஆகியவை இதில் தீவிரமாக வெளிப்படுகின்றன. இறுதியில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் கம்பீரம் மேல்தளத்தை அசைக்க முனைவது மூலம், ஒடுக்கப்பட்ட வாழ்வின் அடக்கமில்லாத எதிர்ப்பும் மறைந்த வலிமையும் உணர்த்தப்படுகிறது. கவிதை முழுமை பெற்ற அடித்தளங்கள் காற்றில் பயணிக்க தேர்ந்தெடுக்கப்படாதவை- நிறைவாகிய வாசல் வரவேற்கவும் அனுமதி இல்லாதவை. வறுமையின் பிடியில்- செந்நீர் ஊற்று ஊடுருவ மறுக்கும், வெள்ளைக் கூட்டின் நகலாய் படர்ந்திருக்கும் மேலாடை சுருக்கமும் விரிவடைய மறுக்கும், ஆதி மனிதனின் உயிர் வளர்த்த நெருப்பு, பசியாய் உருவெடுத்து உயிர் கெடுக்க இசையும், உடல் சுமக்கும் பாதங்களும், தடம் காணும் கைகளும் பாரமென மண்ணில் இளைப்பாற நினைக்கும், வி...

பிறை

படம்
பிறை செங்கதிர் அரசாளும் நீலத் திரையில்,  மௌனத்தின் முழக்கத்தில் துளிர்விடும் வெண்பூக்கள் மலர்ந்தும், மலராமலும் கண் சிமிட்ட- பிறை மடந்தை குலம் தழைக்க  துயில் துறக்கும் இருள் காலம். விதிக்கப்பட்ட வடிவத்திற்குள் கறை குடியேறியும் வாசல் மறுத்ததில்லை. கார் முகில் கூட்டம் மறைத்த போதும் தோய்வுற்றதில்லை. இருள் விழுங்கி  செரித்தும் சலனமில்லை. உதித்த பொழுதின் துளிகளுக்கும் சான்றில்லை. கரையும் நேரம் காற்றுக்கும் தென்படவில்லை. இல்லையின் பயணத்தில் நிலையில்லா ஆற்றல் நிறைவாய் மறைந்திருப்பது- விரிந்த சுவாசத்திற்குள் அகப்பட்டிருக்கும்  இயற்கையின் எழுதப்பட்ட இரகசியம்.  இரகசியத்தில்- பதியம் வைத்த புலண்களுக்கு பிறை சேரா  நிலமென்று எதுவுமில்லை. ஒளியோடு பயணிக்கும் மனம் மறைத்த  உயிர்களுக்கு உயரிய மரபும் பயணற்று போனதில்லை, மாறாக காரியங்களின் சுமைகளால் தோய்வடைந்து, புதுப்பிக்க ஆழ்ந்த நித்திரையில் அடைப்பட்டிருக்கின்றன. நாட்குறிப்பு கண்கள் விழித்திராத காட்சிகளும், செவிகள் நெருங்கிடாத செய்திகளும், கரங்கள் வருடா உருவங்களும் மர்மமாய்  புணரப்பட்டாலும், அதனுள் மறைந்தா...

வாழ்த்து

படம்
வாழ்த்து நான் பதித்த தடங்களுக்கும் உணர்வுகள் உண்டு நான் நுகர்ந்த சுவாசத்திற்கும் புதுமை உண்டு நான் விழித்த உதயத்திற்கும் நன்மை உண்டு நான் சூழ்ந்த இயற்கைக்கும் நிகழ்வுகள் உண்டு நான் பழித்த சொல்லுக்கும் நாட்டம் உண்டு நான் ரசித்த மலருக்கும் கற்பனை உண்டு நான் போற்றிய நல்லிசைக்கும் ஏற்றம் உண்டு நான் வகுத்த வாழ்வியலில் இலக்கணம் உண்டு நான் பகிர்ந்த உறவுக்கும் வாசம் உண்டு நான் துறந்த வாசலுக்கும் மகிமை உண்டு. இரு விழியில் இரு பார்வையின் கட்டளைகள் மறந்து, உதிர்ந்த மலரின் நறுமணத்தில் பயணம் தொடர- நெடு வானம் மேற்கூரையாய், நட்சத்திரங்கள் ஒளி வீச, புது நிலவின் திலகம் சுமந்து, கீழ் வானின் சித்திரம் கண்டு ஒன்று கலந்த பாதங்களில் வாழ்வு நகர இரு இதயங்களின்  ஒற்றை நல்வாழ்த்துக்கள்.

அணங்கு

படம்
அணங்கு உள்ளடக்கம் " அணங்கு"  என்னும் சொல் சங்க இலக்கியத்தில் பெண்ணைக்  குறிப்பதாகும். ஒரு தாயின் இதயத்தில் பிறந்த இக்கவிதை தன் மகளை  ஒளியாய், இனிமையாய், கருணையாய் காணும் உணர்வை வெளிப்படுத்துகிறது. மழலை சிரிப்பிலும், சிறு செயல்களிலும் வாழ்க்கையின் உண்மைமயான அர்த்தத்தை காணும் தாயின் பயணம் இது. கவிதை மின் மினியின் மகளாய் ஒளி பகிர்ந்து தந்தாய், தேனீக்களின் அரசியாய் சுவை உணர வைத்தாய், முத்தமிழின் மூத்தவளாய் மன்றம் ஏற்க வந்தாய், குழலின் மொழியாய் செவி சுவைக்க நின்றாய், கொடியின் இடையாய் பருவம் ஏற்று மலர்ந்தாய், மீன் வடித்த விழியாய் கருணை கற்று வளர்ந்தாய், மகிழ்ச்சியின் சாமரம் வீசி அகம் குளிர்வித்தாய், உருவமாய் எனை வளர்த்த என் உயிர் துடிப்பில்  கண் அயர்ந்து, என்  மூச்சில் குளிர் காய்ந்து, உன் தவம் கலைத்து என் பார்வையின் நிழலில், நீ அறிந்ததை மழலை மொழியில் விளக்க துடித்தாய், சுவையின் இலக்கணமாய் நாவில் தவழ்ந்த  இசையயை மெய் மறந்து ஆற்றலானேன். பிறவி ஏழும் பொய்யானது உறவின் தாகம் தணியாமல்:  முடிவுரையின்  தொடக்கமாய் உதித்தாய் கடந்த காலங்களின் சுமை விலகி முழுமையடைந...

அறியாதது

படம்
அறியாதது உள்ளடக்கம் இந்தக் கவிதை வாழ்க்கையின் பல பரிணாமங்களை ஆழமாக ஆராயும் தத்துவப் பயணமாகும். மண், மழை, விதி, காற்று, வானவில், போன்ற இயற்கை உருவகங்களின் மூலம் மனிதன் அனுபவிக்கும் உணர்வுகள், உறவுகள், உண்மை, துரோகம், நினைவுகள் ஆகியவை வெளிப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதை உணரும் தனித்தன்மை இருக்கிறது என்ற கருத்தை கவிதை வலியுறுத்துகிறது. இறுதியில் மனிதன் அறிந்ததாக நினைப்பது எல்லாம் அறியாமையின் தொடக்கமே என்றும், விழித்திருந்தாலும் முழு பார்வை இல்லாத நிலையிலேயே வாழ்கிறான் என்றும் ஒரு ஆழமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. கவிதை மண் புழுதியின் ஏக்கம் மழை சாரல் அறியும். விண்கல் பயணம் ஆழ்துளை அறியும். விழுதுகள் படரும் நேரம் விதி அறியும். பிறப்பின் காலம் வம்சம் அறியும். எண்ணங்கள் அசைபோடும் வேகம் காற்று  அறியும். உயிர்தூறல்  எதுவரை வாழ்நாள் அறியும். நிறங்களின் ஆயுட்காலம் வானவில் அறியும். உண்மை இடறிய கணம் துரோகம் அறியும். நிலையில்லா நிலத்தின் அகந்தை கல்தூண் அறியும். கடந்த காலத்தின் சுமை வரும்காலம் அறியும். வீரத்தின் வலிமை மகுடம் அறியும். புலமை புகுந்த வரிகள் மொழி அறியும். உறவில் பதிந்...