கானல் நீர்
உள்ளடக்கம்
இந்தக் கவிதை இல்லாமையின் மூலம் சொல்லப்படும் இருப்பை பேசுகிறது. இயற்கை, கலை, மரபு, உணர்வு, பெண்ணியம் - எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய அடிப்படை பண்புகள் மறுக்கப்பட்டுள்ள ஒரு உலகம் வரிசையாக உருவாக்கப்பட்டுள்ளது.
கவிதை
முகில் இடறிய வானம்,
பனி படறா புல்வெளி,
அலை உறங்கும் கடல்,
இலை வருடா பூங்காற்று,
பெண்மை மறைத்த நளினம்,
வாழை மறுத்த விருந்தோம்பல்,
திசைகள் கலைந்த பூலோகம்,
கார் முகில் பழித்த மயில்தோகை,
தூரிகை துறந்த அழகோவியம்,
தளபதி முன்மொழியா போர்முழக்கம்,
ஜதி இணையா நாட்டியம்,
மழை நனையாத மலையருவி,
மழலை உணரா தாலாட்டு,
தேரடி காணா தேரோட்டம்,
இரவு விழித்திராத விடி வெள்ளி,
மலர்கள் நுகராத தேனீக்கள்,
வெயில் வடித்த வானவில்,
வரலாறு பதியாத செப்பேடு,
சுமை விழுங்கிய பெண்ணாற்றல்
கண்டும், காணாமலும்
அசைப்போடும்
சிலை வடித்த முகபாவம்
கானல் நீரில் கரையும்
கருத்துகள்
கருத்துரையிடுக