நோக்கம்

உள்ளடக்கம்

இந்தக் கவிதை இயற்கை, மனிதன், காலம் மற்றும் வாழ்க்கை ஆகிய அனைத்தும் எதை நோக்கி நகர்கின்றன என்ற அடிப்படை தத்துவக் கேள்வியை முன்வைக்கிறது.

கவிதை

வானம் போர்த்திய நிலமும்
போர்வை துளைத்த நட்சத்திரங்களும்
எதை நோக்கி..

மண் கலந்த வாசமும்
மழையறியா விரிசல் நிலமும்
எதை நோக்கி..

வெப்பம்  ஈன்ற தீப்பொறியும்
தாவரம் தழைக்காத வெண்ணிற பூமியும் எதை நோக்கி..

பிறப்பு சுமக்கும் இரகசியமும்
முடிவரியா பயணத்தின் தொடர்கதையும் எதை நோக்கி..

சூரியன் மறைந்த நல்லிரவும்
வெளிச்சம் பரிமாறும் நில வொளியும்
எதை நோக்கி..

பற்றில்லா புறம் காணும் துறவும்
ஆசையின் பொதி சுமக்கும் மானிடமும்
எதை நோக்கி..

சமூகம் வரைந்திடாத ஓவியமும்
வண்ணம் தீட்ட பாயும் கரங்களும்
எதை நோக்கி..

இரு விழிகளின் காட்சியும்
ஆயுள் மறந்த பூமி சுழள்வதை நோக்கி..

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

உடமை

இயற்கை

நானும் அவளும்