நிழலும் நிஜம் தேடும்
உள்ளடக்கம்
இந்தக் கவிதை மனிதன் அனுபவிக்கும் சோர்வு, மன மறுபிறவி, அன்பின் அரவனைப்பு மற்றும் இயற்கையோடு ஒன்றும் வாழ்க்கை சுழற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டது.
கவிதை
தரை தொட்ட கணம்
பொழுதும் சோர்ந்து போய்,
ஓய்வின் நுழைவாயில்
சேர்ந்தும்,சேராமலும்
என் கண்கள் ஒளி பெற
காத்திருந்தது.
கருவறை துறந்த மறுகணம்
மனம் உதித்த தளிர் மேனியில்
காலமும், பட்டும் படாமல்
என்னை வரவேற்கிறது என
சலனம் தழுவியது.
செவி திகட்டா சொல்லழகும்,
என் நிழலின் மறுஉருவமாய்
விரலின் வேலிக்குள்
புறம் செழித்தது
அகமும் குளிர்ந்தது.
மதி வளர்த்த கல்வியும்
உறம் சேர்த்த உறவும்
வண்ணம் போர்த்திய கனவும்
அழகாய் பாதை தொடுத்தது.
கரை சூழ்ந்த பூங்காற்று
நீரோடையின் வழி கொண்டு
மறுகரை சேர்ந்தது.
வெண் மேகம் கரை படிந்து
ஒளியும் கண் மறைத்தது.
மழைத் துளியில் மாசகன்று
வளமாய் வாழ்வதும்
காற்றில் ஈரம் கரைந்து
நிலம் தாகம் கொள்வதும்
இயற்கையின் அரவணைப்பில்..
Beautiful
பதிலளிநீக்கு