உருவம்
உள்ளடக்கம்
இந்தக் கவிதை காற்றைப் போல கண்ணுக்குப் புலப்படாமல் உடலுக்குள் மறைந்திருந்து, படைத்தவனின் ஆனையேற்று, காலம் முடியும் வரை பயணிக்கும் உருவமில்லா உயிர் சேர்ந்தது.
உயிர் உடலில் மறைந்திருக்கும் வரை நல்லாற்றலாய் செயல்பட வேண்டும் என்பதை மாசற்ற சூரியனின் ஒளியில் ஒரு துளியும் கலங்கம் சேர்க்காமலும், உப்பு கலந்த கடல் நீரிலும் நன்னீரின் சுவை உணர்வதும், காற்று கலந்த பூமியில் என் சுவாசம் மட்டும் புதியதாய் தென்பட வேண்டும் என்னும் இயல்பையும் ,ஐம்புலனும் உயிருக்குள் கட்டுப்பட்டு நன்மை தீமைகளை பிரித்து உணரவேண்டும் என்பதையும்,வானம் சூழ்ந்த நிலத்திற்குள் தீயவை தீண்டாத இருப்பிடத்தில் வசிப்பதையும் கடைப்பிடிக்க, பிறப்பில் நீர் சூழ்ந்த உடல் இறுதி காலத்திற்கு பின் மண்ணில் புதையுண்டு மறையும் வரை காற்றடைத்த உடலில் அமைதி காக்க வேண்டும் என்னும் பொருள் கொண்டு "உருவம்" கவிதை படைத்தது.
கவிதை
காற்றின் வம்சமாய்,
புதராடும் கூட்டுக்குள்,
கண்ணிருண்ட உருவமாய்,
சிந்தித்தவனின் சிரம் பற்றி,
காலத்தின் கணக்கில்
அடிபணிந்து,
உயிரென உடல் சேர்ந்தாய்.
சுடர் விரியும் நன்பொழுதில்,
ஒரு துளி சாரலாய்
மேகத்தின் கரை சேரா
நல்லாற்றல் விதைத்திடுவாய்.
கடல் கரைந்த திரவத்தின்
நன்னீர் பாகமாய்
எல்லை காக்க
கற்பிப்பாய்.
பூமி சுமக்கும் காற்றடுக்கில்,
என் சுவாசம் கலையாமல்
நிலம் சேர
துணை நிற்பாய்.
அன்பின் வாசம்
எதுவென துயிலுரிய
ஐம்புலனின்
தலைமை ஏற்பாய்.
படர்ந்த வான் மறைத்த
கூடாரத்தில்
மாசகன்ற உறைவிடம்
உள்வாங்க உறுதி சேர்ப்பாய்.
நீர் தழுவிய சுமை
மண் நிறையும் வரை
காற்றடைத்த வேலியில்
Wonderful
பதிலளிநீக்கு