இடுகைகள்

அகராதி

படம்
காற்றின் மொழி தென்றல், பூவின் மொழி வாசம், மழையின் மொழி சாரல், பறவையின் மொழி சிறகுகள், மகிழ்ச்சியின் மொழி ஆரவாரம், வானின் மொழி நீலம், நிலவின் மொழி ஒளிவட்டம், ஏழையின் மொழி வறுமை, மழலையின் மொழி அழுகை, பெண்ணின் மொழி நாணம், போரின் மொழி வெற்றி, கடலின் மொழி அலைகள், பிறப்பின் மொழி எதிர்ப்பார்ப்பு, அன்பின் மொழி இரகசியம், உறவின் மொழி பிணைப்பு, வாழ்க்கையின் மொழி சரணடைதல், மரணத்தின் மொழி தன்னிறைவு. வாழ்வின் மொழி சுதந்திரம், சிகரத்தின் மொழி  உழைப்பு, தேசத்தின் மொழி ஒற்றுமை,  கல்வியின் மொழி சமநிலை, நாவின் மொழி அறுஞ்சுவை, பசியின் மொழி வறட்சி, மனதின் மொழி சலனம், கேள்வியின் மொழி சிந்தனை, புதுமையின் மொழி ஆராய்ச்சி, பக்தியின் மொழி மௌனம், பிளவின் மொழி உரிமை, பண்பாட்டின் மொழி  பழமை, வாசகர்களின் மொழி புதுமை.. புதியவை வாசகர்களுக்காக.... நாட்குறிப்பு மொழியது, வார்த்தையின் கோர்வைகள் நாவின் வாசல் கடந்து செவி துளைக்கும் ஓசை என ஆராய்வதற்கு காலங்கள் சான்றிருந்தன.  அசைவுகள், வண்ணங்கள், ஓவியங்கள், உணர்வுகள், அனைத்தும் மொழியின் அம்சங்கள். உயிரற்ற நகர்வுகளும்  மொழி கொண்டிருக்கும், வ...

அழகியல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை, அழகு என்பதைக் காட்சியழகாக மட்டும் அல்லாமல், இயற்கை, மனித உணர்வு, பண்பு, மொழி, சமூகநிஜம் ஆகிய அனைத்திலும் பரவியிருக்கும் ஒரு ஆழ்ந்த அனுபவமாக வெளிப்படுத்துகிறது. வானிலிருந்து விதை வரை, மழையிலிருந்து முதுமை வரை, வறுமையிலிருந்து கருணை வரை- எதிர்மறை, நேர்மறை இரண்டிலும் ஒளிந்திருக்கும் அழகை கவிதை நுணுக்கமாகச் சுட்டிக்காட்டுகிறது. இறுதியில், தமிழ் மொழியே அந்த அழகின் உச்சமாக உயர்கிறது. நாட்குறிப்பு அழகு உருவம் சார்ந்ததன்றி, உணர்வு சார்ந்தது. உணர்வுகள் வெளிப்படுத்தும் பிம்பங்கள் அனைத்தும் அழகானவை. விழி காணும் நிஜங்கள் மனம் சென்றடைவதில்லை. மனம் உணர்ந்த நிஜங்கள் விழி சேரும்போது அனைத்தும் அழகானவை. வான் விரிந்த உலகில் வேரூன்றும் பசுமை குவியல்கள், அதனுள் அமர்ந்திருக்கும் வண்ண மலர்கள், கடல் பருகிய நீலம், என எண்ணற்றவை பூமியின் அழகோவியங்கள்.  " அழகு"  தமிழ் அகராதியின் முதல் உயிரும், முதல் மெய்யும் காவல் நின்று நாவில் " ழகரம்" சுழல்வதும் அழகு. கண்களின் திரை அகன்று உற்று நோக்கிய நிகழ்வுகள் அழகியலாய் உங்கள் பார்வைக்கு....... கவிதை வெண்கதிர் மறைத்த வானின் பிறை அ...

முடிவுரை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்வின் ஆழமான வெற்றிடத்தையும், நிறைவேறாத ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.காலம் நகர்ந்தும் வாழ்க்கையின் அர்த்தம் தெளிவாக தெரியாமல் போகும்  ஓரு நிலையை இது காட்டுகிறது. வானம் விரிந்திருந்தாலும் அதன் எல்லை கண்களுக்கு எட்டாதது போல, மனிதன் தேடும் நிறைவு எளிதில் கிடைக்காததாகவே உள்ளது. மேகம் கரைந்து மழையாக  விழுந்தாலும் மண்ணின்  தாகம்  தீராதது போல வாழ்க்கையில் நிகழ்வுகள் பல வந்தாலும் உள்ளத்தின் பசி அடங்காமல் தொடர்கிறது. வெளிப்படையாக இயற்கை இயக்கம் நடைப்பெறுகிறது போல தோன்றினாலும் உள்ளார்ந்த வெறுமை நீங்காத ஒரு அமைதியான வேதனை இந்தக் கவிதையின் மைய உணர்வாக உள்ளது. இது தனிமை, தேடல் மற்றும் நிறைவை நாடும் மனித மனத்தின் நிலையை நுட்பமாக பிரதிபலிக்கிறது. கவிதை முடிவுற்ற காலங்கள் விழித்திருந்தும் வானின் நீளம் தென்படவில்லை. மேகம் கரைந்த நீர்துளிகள் சிந்தியும், மண்ணின் தாகம் தீர்க்கப்படவில்லை. நிலம் இருகிய பாறைகள் குடைந்தும்,பூமியின் புதிர் விடுபடவில்லை. பிறவிகள் ஏழு கடந்தும்,சூரியனின் கதிர்கள் குன்றியதில்லை. நொடியின்  இடையில் இமை மூடும் விழிகள் கரைந்தால...

பெண்ணெனும் நான்........

படம்
நாட்குறிப்பு பெண் என்னும் அகராதி சாபத்திற்குள் அகப்பட்ட வரம். பிறந்ந பாதையில் வரங்கள் பின்தொடர்வதுமில்லை, சாபங்கள் வழி மறுப்பதுமில்லை. நிழலை உற்று நோக்கும் கனம், தனிமை முழுவதுமாய் ஆட்கொண்டிருக்கும். தனிமையில் இரவுக்கும், வெளிச்சத்திற்கும் வேறுபாடில்லை. உணர்வுகளின் துணைக்கொண்ட ஆற்றலின் வடிவம் சிகரம் கடந்து செல்லும். வழித்துணையின் பல்லக்கு அயராமல் சுமந்தாலும் இளைப்பாற ஒரு அடியேனும் தனக்கென பகிர்ந்திருக்க வேண்டும். உபயம் சேர்க்கும் கற்சிலையாய் ஊர்வதை கடந்து, உளி செதுக்கிய பெண் உருவமாய் நகர்வது சிறப்பு. எண்ணங்களின் அலைவரிசை மனதின் இசையாய் வெளிப்பட, பாதங்கள் வண்ணத்தில் நனைந்திருக்க வேண்டும். இருளில் நிறம் மறைந்தாலும் செவிகள் இன்புற்று கடந்து செல்லும். நான் படைத்த " பெண்ணெனும் நான்" உணரவிருக்கும் காலத்தின்  பரிணாமங்கள். கவிதை கருவறை கோப்பைக்குள் உயிரெனும் ஆற்றலோடு வடிவமில்லா சிறுதுகளாய் அங்கும், இங்கும் அலைந்து ஓரிடத்தில் இளைப்பாறினேன். இயற்கை வரமளித்த இரு இனங்களின் ஒரு இனமாய், காற்றும், செந்நீரும் ஒரு சேர கலந்து கருவண்ணம் ஆட் கொண்ட  அறையில்,சலனமில்லாமல் வீற்றிர...

எல்லை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்க்கை இயற்கையின் சட்டங்களைப் போல எளிமையுடனும், உண்மையுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது போல தோன்றுகிறது. இயற்கை எந்தச் செயலும் எதிர்பார்ப்பின்றி தன் இயல்பின்படி நடைபெறுகிறது. மலர் நறுமணம் தருவதற்கு யாருடைய முகவரியும் தேடவில்லை.  விதை முளைக்க முன் ஆய்வு செய்வதில்லை. கதிரவன் உதித்து மறைவது அவனது கடமை. அதேபோல் மனிதனும் தன் பண்பை காத்து வாழ வேண்டும். கர்வம், சீற்றம், கண்ணியமின்மை போன்றவை இயற்கையின் சீரிய ஒழுங்கில் இடமில்லை என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. மனித சமுதாயம் இயற்கையைப் போல் சீராக இருந்தால் அதுவே இறை உணர்வை அடையும் வழி என்னும் தத்துவப் பின்னணியில் இந்தக் கவிதை அமைந்துள்ளது. கவிதை மலரில் கரைந்த நறுமணம், காற்றின் முகவரி தேடுவதில்லை. சுவை கலந்ந கனியின் மொழி, புலமைக்கு காத்திருப்பதில்லை. விதை உண்ட செம்மண், பசுமை உமிழ ஆராய்வதில்லை. தரை பயணம் முடியும்வரை, மழை நீர் துணைசேர்வதில்லை. மீன்களின் ஆயுள் முடியும்வரை, நாரைகளின் தவம் கலைவதில்லை. இலைகள் ஆடும் நாட்டியத்தை, இடியின் தாளம் நிர்ணயிப்பதில்லை.   சுற்றம் கனித்த செவியின் ...

கடல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை காலத்தின் ஓட்டத்தை நீரின் அலைகளாக உருவகித்து, இயற்கை, மனித இனம் மற்றும் வரலாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. மறைவு, இருள், மௌனம் ஆகியவற்றுக்குள் கூட புதிய விடியல் பிறக்கிறது. மண்ணை வளர்த்தும், இனத்தை உருவாக்கியும், கலை- பண்பாட்டை வடிவமைத்தும் வர- லாற்றில் தடம் பதித்த முன்னோடிகளின் உழைப்பு, சொல்லப்படாத காவியங்களாக  உறங்குகிறது. தற்காலிகமான உடமைகளைத் தாண்டி, மண்ணின் ஆழத்தில் தவமிருக்கும் ஒளி, தடைகளை உடைத்து எதிர்காலத்தை நோக்கி எழும் நம்பிக்கையாக கவிதை நிறைவு பெறுகிறது. கவிதை காலத்தின் பதிவுகளை நீர் ஏட்டில் குறித்த அலையின் பக்கங்கள், திறக்க கரை தொடுகின்றன நட்சத்திரங்களின் மறைவில் புதிய விடியல் தோன்றும் இயற்கையின் விதியில்- மண் வளர்த்து இனம் வளர்த்து கற்சிற்பம் வடிவமைத்து வரலாற்று ஏட்டில் கால்பதித்த முன்னோடிகள் கதிரவனின் முரண்பட்ட பாகத்துக்குள் நீரை மட்டும் சுவாசித்து காரிருளில் அமைதியாய் உறங்கும் காவியங்கள்  நூறாயிரம், வரலாற்றின் பாதங்கள் நடைத்தளறாது முன்னோக்கி செல்ல அடியமைத்துக் காத்திருக்கின்றன கண் பட்ட  உடமைக...

ஒழிவு

படம்
ஒரு  செயலை செய்து முடித்தபின் கிடைக்கும்  இடைவெளியை "ஒழிவு" என சங்கக்காலத்தில்  பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒழிவு ஒளி  துயிலும் நள்ளிரவில், மூடுபனி காற்றை மறித்து வெண்ணிலா நிலமாளும் பகலிரவு. மலரின் போர்வை அகற்றி, இலை உதிர்த்து, வேர் கொண்டு வான் சேரநினைக்கும் மரக்கூடு. பாதத்தின் வன்மம் கரைய, வெப்பம் தாங்கி நிற்க நிலமுறங்கும் பனிமேடு. மேன்மையின் மகுடமும் ஆற்றாமையின்  ஆயுட்காலமும் மறைந்திருக்கும் காலச்சக்கரம். நாட்கள் செழிக்க, திங்கள் உறவுசேர இரு குணங்களில்  காத்திருக்கும் ஒற்றை அனுஆற்றல். அறிவியலில் விழி அமர்த்தி மௌனமாய் கடந்து செல்லும் ஆன்மீகம். நிறங்களின்  சுதந்திரத்தில் மனமகிழும்  உணர்வுகள்: சிவப்பின் சிறைவாசத்தில் அகமகிழும் நினைவுகள். உட்பொருள் உயிர் மட்டும் ஒயாமல் கடந்து செல்ல, சில மணித் துளிகள் அசையாமல் வீற்றிருக்க,காலமாய் விரும்புவது அமைதி. அசைவில்லா ஆற்றலுக்கும் மனமுண்டு, ஏக்கமும் உண்டு. இயற்கை சாராத முன்னெடுப்புகள் அமைதியை உருக்குலைய வைக்கும் தருணம் இயற்கையும அமைதி இழந்து போராட்டம் காணும். பாரம் தாங்கும் நெல்மணிகளும் குவியலில் ஒய்வு...