இடுகைகள்

பிப்ரவரி, 2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எல்லை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்க்கை இயற்கையின் சட்டங்களைப் போல எளிமையுடனும், உண்மையுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது போல தோன்றுகிறது. இயற்கை எந்தச் செயலும் எதிர்பார்ப்பின்றி தன் இயல்பின்படி நடைபெறுகிறது. மலர் நறுமணம் தருவதற்கு யாருடைய முகவரியும் தேடவில்லை.  விதை முளைக்க முன் ஆய்வு செய்வதில்லை. கதிரவன் உதித்து மறைவது அவனது கடமை. அதேபோல் மனிதனும் தன் பண்பை காத்து வாழ வேண்டும். கர்வம், சீற்றம், கண்ணியமின்மை போன்றவை இயற்கையின் சீரிய ஒழுங்கில் இடமில்லை என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. மனித சமுதாயம் இயற்கையைப் போல் சீராக இருந்தால் அதுவே இறை உணர்வை அடையும் வழி என்னும் தத்துவப் பின்னணியில் இந்தக் கவிதை அமைந்துள்ளது. கவிதை மலரில் கரைந்த நறுமணம், காற்றின் முகவரி தேடுவதில்லை. சுவை கலந்ந கனியின் மொழி, புலமைக்கு காத்திருப்பதில்லை. விதை உண்ட செம்மண், பசுமை உமிழ ஆராய்வதில்லை. தரை பயணம் முடியும்வரை, மழை நீர் துணைசேர்வதில்லை. மீன்களின் ஆயுள் முடியும்வரை, நாரைகளின் தவம் கலைவதில்லை. இலைகள் ஆடும் நாட்டியத்தை, இடியின் தாளம் நிர்ணயிப்பதில்லை. நாணம் புதைத்த பெண்ணின் உருவம், கர்வம் சேர்க...

அலைகள்

படம்
உள்ளடக்கம் " அலைகள்" - வாழ்க்கையை ஒரு தொடர்ச்சியான உள் மற்றும் வெளிப்புற பயணமாகப் பார்க்கும் கவிதை. இங்கு நிழல்கள்  என்பது கடந்த கால ஆனுபவங்கள், நினைவுகள், வேதனைகள், தோரணம் என்பது அவற்றை அலங்கரித்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை- உண்மை( நிஜம்) என்பது வெற்றிடத்தையும், வேகத்தையும் தன் வசப்படுத்தும் சக்தியாக வர்ணிக்கப்படுகிறது- அது அழகிய நிறங்களைக் கூட கரைத்து விடும் ஒரு துல்லியமான அனுபவமாக. பிரிவு, வறுமை, தோல்வி போன்ற வாழ்க்கையின் கட்டங்கள் இங்கு சோகமாக அல்ல, பரிணாம நிலைகளாக பார்க்கப்படுகின்றன. பின் நோக்கிய நினைவுகள் குவிந்தாலும், முன்நோக்கிய பயணம் நிற்கவில்லை. வறுமை தடையாக இருந்தாலும், கானலில் கூட  பசுமை முளைக்கும் என்பது போல் நம்பிக்கை மறையவில்லை.' இரு துணையின் ஒற்றை பல்லக்கு' என்பது காலத்தின் சுமையையும் உறவின் நிலைத்தன்மையையும் ஒரே உருவகத்தில் இணைக்கிறது. கவிதையின் இறுதியில் தன்னுயர்வு முக்கியமாகிறது. வெளிப்புற உலகின் குழப்பம், தர்க்கம், சிதைவு ஆகியவற்றை கடந்து, தனி மனிதன் தனது உள்ளார்ந்த மகுடத்தை அடையும் நிலை வெளிப்படுகிறது. வாழ்க்கை ( கதம்பம்), ஆனால்  ஒரு விதை போல் மனிதன்...

வறுமை

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை, வறுமையை ஒரு பொருளாதார நிலையாக அல்லாமல், மனித உடல், உயிர், சுவாசம், காலம் மற்றும் சமூக அடுக்குகள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும் முழுமையான அனுபவமாகப் பதிவு செய்கிறது. வாய்ப்புகள் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் சமூக வாசல்கள், அடிப்படை தேவைகளே அடைப்பாக மாறும் வாழ்வியல் சூழல், உயிர் காக்க வேண்டிய ஆதிமூல சக்திகள் உயிர் கெடுக்கும் பசியாக உருமாறும் நிலை ஆகியவை இதில் தீவிரமாக வெளிப்படுகின்றன. இறுதியில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் கம்பீரம் மேல்தளத்தை அசைக்க முனைவது மூலம், ஒடுக்கப்பட்ட வாழ்வின் அடக்கமில்லாத எதிர்ப்பும் மறைந்த வலிமையும் உணர்த்தப்படுகிறது. கவிதை முழுமை பெற்ற அடித்தளங்கள் காற்றில் பயணிக்க தேர்ந்தெடுக்கப்படாதவை- நிறைவாகிய வாசல் வரவேற்கவும் அனுமதி இல்லாதவை. வறுமையின் பிடியில்- செந்நீர் ஊற்று ஊடுருவ மறுக்கும், வெள்ளைக் கூட்டின் நகலாய் படர்ந்திருக்கும் மேலாடை சுருக்கமும் விரிவடைய மறுக்கும், ஆதி மனிதனின் உயிர் வளர்த்த நெருப்பு, பசியாய் உருவெடுத்து உயிர் கெடுக்க இசையும், உடல் சுமக்கும் பாதங்களும், தடம் காணும் கைகளும் பாரமென மண்ணில் இளைப்பாற நினைக்கும், விழித்தி...

பெண்ணெனும் நான்........

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை கருவறையில் உருவாகும் உயிரின் பயணத்தை அதன் உணர்வுகளுடன் விவரிக்கிறது. வடிவமில்லா சிறுதுகளாகத் தொடங்கி இயற்கையின் அருளால் வடிவம் பெற்று தாயின் வெதுவெதுப்பான பாதுகாப்பிலும், தாலாட்டிலும் வளர்ந்து, இறுதியில் பெண்ணாக உருவெடுக்கும் ஆன்மிக- உடல் பயணமே இதன் மையம். தாய்- குழந்தை உறவு, உயிரின் தோற்றம், பெண்ணின் பிறப்பு மற்றும் அவளுக்குள் புதைந்துள்ள உயிர்சக்தி ஆகியவை கவிதையின் ஆதார உணர்வுகள். கவிதை கருவறை எனும் கோப்பைக்குள் உயிரெனும் ஆற்றலோடு, வடிவமிலா சிறுதுகலாய் அங்கும், இங்கும் அலைந்து ஓரிடத்தில் இளைப்பாறினேன். இயற்கை வரமளித்த இரு இனங்களின் ஓரினமாய், காற்றும் செந்நீரும் ஒரு சேர கலந்து, கருவண்ணம் ஆட்கொண்ட அறையில் சலனமில்லாமல் வீற்றிருந்தேன். தனிமையில் நான் உறங்க இருக்கரங்கள் பற்றிக்கொண்ட வெதுவெதுப்பில், ஓரு குரலின் தாலாட்டில் ஒவ்வொரு திங்களாய் பொலிவு பெற்றேன். என் அறையின் நீலம் அகலம் குறைய, உயிர் நீர் சுவாசம் தர, என் வாசல் எதுவென்று கொடியசைத்து வினவினேன். என் பாதம் தரைதொட, என் அறையின் நினைவுகள் காலத்தோடு பயணிக்க, என் அடி உடல் கனக்க என் தாய் எனக்கு பரிசளித்தா...

நானும் அவளும்

படம்
உள்ளடக்கம் இயற்கையின் மடியில் மலர் ஒரு உயிராகப் பிறந்து, மொட்டாகி, மலர்ந்து வண்ணத்துப் பூச்சிகளுடன் உறவாடி தன் வாழ்வை நிறைவு செய்து உதிரும் தருணம் வரை நிகழும் வாழ்க்கைச் சுழற்சியை இந்தக் கவிதை சித்தரிக்கிறது. உதிர்வு இங்கு இழப்பாக அல்ல: தொடர்ச்சிக்கான அமைதியான பிரியாவிடையாக வெளிப்படுகிறது கவிதை இலை  தாங்கிய  மொட்டுக்கள் இரவின்  காவலில் இதழ்  விரித்து, பனித்துளியில்  நீராடி, வெண்கதிரில்  இதழ்  உலர்த்தி, வண்டிசையின்  வரவேற்பில் தேவதைகள்  கைப்பட ஒற்றை  நாற்காலியில் வீற்றிருக்கின்றன. முட்கள்  பதித்த திரைமறைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட  வண்ணங்களை, ஓவியமாய்  தீட்டப்பட்ட  இறகுகள், காற்றினும்  மெல்லிய  இடை  விரிந்து, இயற்கை  பகிர்ந்த  பருவ கால இரகசியத்தை கொண்டு  சேர்க்கும் வண்ணத்து  பூச்சி மலரின்  உற்ற தோழன். எண்களின்  முதன்மையாய் வரிசைகள்  பின்தொடரும் ஒற்றை  பொழுதின், விதி சுமந்து இயற்கையுடன் ஒன்றென கலந்த உயிரின்  இழப்பை, மலர் பொழிந்து, பிரியாவிட...

களம்

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை மண், இனம், வேர், கொடி, தலைமை ஆகிய உருவகங்களின் வழியாக ஒரு சமூகத்தின் அரசியல்- பண்பாடு பயணத்தை பேசுகிறது. மண்ணின் தாகம் என்பது அடக்கப்பட்ட மக்களின் உயிர்த்தாகமாகவும், ஊற்றாய் உயிர் வளர்ப்பது கூட்டு முயற்சியையும் குறிக்கிறது. வேர் - விதை- துளிர் என்ற இயற்கை சுழற்சி இனத்தின் தொடர்ச்சியையும், காலத்தை கணிக்கும் அரசியல் விழிப்புணர்வையும் காட்டுகிறது. தனிநபர் அல்ல, கூட்டு உணர்வே தலைமை எனும் கருத்து, " தலைவனின் இலக்கணம்" பகுதியில் வலுவாக நிறுவப்படுகிறது. கவிதை மண்ணின் தாகம் ஊற்றாய் உயிர் வளர்க்க, பாதம் பதிந்த நிலமும் ஒரு குரலில் சுவாசிக்க, என் இனம் எனும் வேர் கரங்களை கட்டி மையத்தில் சின்னம் ஏற்றி, கொடியாய் சிகரம் தொட்டது. கோபுரமாய் உயர்ந்த மணல் திட்டுக்கள், காற்றின் சுழற்சியில் திசை நான்கில் பயணித்து தாய் கொடியின் நகலாய், கலம் காண பயணிக்கின்றது. இனத்தின் உயிர் புதைந்த வேர் காலத்தின் கணிதனாய், உள்ளும் புறமும் நன்கறியும்- காற்றில் அலைப்பாயும் சரகுகளை உரமாய் தன்னுள் வளர்த்து, காட்டாற்றின் நீரை நெறிப்படுத்தி, தன்னுள் ஈர்த்துக்கொண்டு பருவங்கள் எதிர்நோக்கி, துளிர் ...

முரண்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் தனது உடல், உணர்வு, காலம் மற்றும் உறவுகளுடன் எதிர்கொள்ளும் மாற்றங்களை அச்சமின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வெளிப்படுத்துகிறது. உயர்வு- தாழ்வு, இளமை- முதுமை, தனிமை- துணை போன்ற இருமைகளின் நடுவில் நின்றும், அகந்தை அல்லது தளர்வு இன்றி தொடரும் சுயநிலையே இதன் மைய சூழலாக அமைகிறது. ஒவ்வொரு செயல்பாடும் பயத்தின் மறுப்பாகவும், விழிப்புணர்வின் உறுதியாகவும் பதிவு செய்யப்படுகிறது. கவிதை தலைக்கனம்  மதிகெடுக்கும்  என உச்சி நிமிர ஆராய்வதில்லை, இமைகள்  விடைப்பெறும் என விழிகள்   விழித்திருக்க  தயங்குவதில்லை, சுவாசத்தின்  பரிமாற்றம்  அழற்சி  தருமென கண்களின்  நேர்கோடு  விலகுவதில்லை, நாவின்  உரசல்கள்  பிளவுபடும் என உதடுகள்  பிரிந்திருக்க  அஞ்சுவதில்லை, ஒலியின்  நீளம் மிகினும், குறையினும் துருவங்கள்  ஒன்றினைவதில்லை, கரங்களின் நேர்த்தியை முதுமை பின்தள்ளும்  என விரல்கள் நடுங்குவதில்லை, பாதங்களின்  அழுத்தத்தை கைத்துணை பகிர்ந்துகொள்ளும்  என நடை தளர்வதில்லை, ஒரு நொடி  ...

தேடல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை " தேடல்" என்பதை இயற்கையின் அடிப்படைத் தன்மையாகவும், உயிரின் அடையாளமாகவும் முன்வைக்கிறது. கதிரவன் முதல் உயிர் வரை அனைத்தும் தமக்கான நிறைவை, எல்லையை அல்லது விடுதலையை நோக்கி இடையறாது பயணிக்கின்றன. அந்த தேடல் வெளிப்படையான இலக்கை அடைவதற்கல்ல: கரைதல், இளைப்பாறு, அனுமதி போன்ற உள்ளார்ந்த நிலைகளை அடைவதற்கானது. கவிதையின் முடிவில் கூறப்படும்" காட்சிக்கு தென்படாதவை" என்பது தேடலின் உண்மையான நீளம் கண்களால் அளக்க முடியாதது: அது உணர்விலும் அனுபவத்திலும் மட்டுமே அறியப்படுவதாகும். இதன் முலம் மனித வாழ்க்கையின் அஸ்தித்வப் பயணமும் இயற்கையின் ஓட்டத்தோடு ஒப்பிடப்படுகிறது. கவிதை கதிரவனின்  தேடல்- நீலம் படிந்த கூரை தாழ்ந்து  மண்ணில் புதையும் வரை, காற்றின் தேடல்- சுவாசம் மறந்த நாடி இளைப்பாறும் வரை, கடலின் தேடல் - ஆழம் தடைப்படும் மண்குவியல் தோன்றும் வரை, பனியின் தேடல் - வெப்பம் சிதைக்கும் வெண்பாறை ஓடை காணும் வரை, நெருப்பின் தேடல் - செந்நிறம் மறைத்த காரிருள் வானில் படியும் வரை, வெப்பத்தின் தேடல் - உமிழ் தொலைத்த தாகம் நன்னீர் சேரும் வரை, அமைதியின் தேடல் - கலவரத்தின் நிழல...

கடல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை காலத்தின் ஓட்டத்தை நீரின் அலைகளாக உருவகித்து, இயற்கை, மனித இனம் மற்றும் வரலாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. மறைவு, இருள், மௌனம் ஆகியவற்றுக்குள் கூட புதிய விடியல் பிறக்கிறது. மண்ணை வளர்த்தும், இனத்தை உருவாக்கியும், கலை- பண்பாட்டை வடிவமைத்தும் வர- லாற்றில் தடம் பதித்த முன்னோடிகளின் உழைப்பு, சொல்லப்படாத காவியங்களாக உறங்குகிறது. தற்காலி கமான உடமைகளைத் தாண்டி, மண்ணின் ஆழத்தில் தவமிருக்கும் ஒளி, தடைகளை உடைத்து எதிர்காலத்தை நோக்கி எழும் நம்பிக்கையாக கவிதை நிறைவு பெறுகிறது. கவிதை காலத்தின் பதிவுகளை நீர் ஏட்டில் குறித்த அலையின் பக்கங்கள், திறக்க கரை தொடுகின்றன நட்சத்திரங்களின் மறைவில் புதிய விடியல் தோன்றும் இயற்கையின் விதியில்- மண் வளர்த்து இனம் வளர்த்து கற்சிற்பம் வடிவமைத்து வரலாற்று ஏட்டில் கால்பதித்த முன்னோடிகள் கதிரவனின் முரண்பட்ட பாகத்துக்குள் நீரை மட்டும் சுவாசித்து காரிருளில் அமைதியாய் உறங்கும் காவியங்கள்  நூறாயிரம், வரலாற்றின் பாதங்கள் நடைத்தளறாது முன்னோக்கி செல்ல அடியமைத்துக் காத்திருக்கின்றன கண் பட்ட  உடமைகள் கைப...

எதிர்முனை

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை உலகத்தில் காணப்படும் சக்தி, கட்டுப்பாடு, அதிகாரம் ஆகியவை எதனால் நார்ணயக்கப்படுகின்றன என்பதைக் குறித்து சிந்திக்கிறது. இயற்கை நிகழ்வுகள், காலம், மனித உழைப்பு, சமூக அமைப்புகள், மனநிலை மற்றும் அகந்தை ஆகிய வை தத்தம் காரணிகளின் வசப்படுத்தலுக்குள் இயங்குகின்றன என்பதை வரிசையாகக் காட்டுகிறது. ஆனால் இறுதியில், உண்மை, நேர்மை மற்றும் ஆழ்ந்த புரிதல் ஆகியவை எந்தக் கட்டுப்பாட்டுக்கும் முழுமையாக உட்படாதவை என்பதை உணர்த்துகிறது. இது மனிதன் எல்லாவற்றையும் அளக்கவும், ஆளவும் முடியும் என்ற அகந்தைக்கு எதிரான ஒரு தத்துவக்  கேள்வியாக நிற்கிறது. கவிதை இருளின் கர்வம் மின்மினி  வசப்படும், வெண்மேக நிறம் காரிருள்  வசப்படும், நீரின்  வேகம் கூழாங்கல்  வசப்படும், மலை முகடின் உயரம் உளியின்  வசப்படும், வெண்பஞ்சு  காலம் திரியின்  வசப்படும், சுட்டெரிக்கும்  அனல்காற்று பருவமழை  வசப்படும், குளிர்பனி காலம் கதிரவன்  வசப்படும், கனமான இதயம் இறையருள்  வசப்படும், செல்வச்செருக்கு வள்ளல்  வசப்படும், வறுமையின்  துயரம் உழைப...

இரண்டெழுத்து

படம்
உள்ளடக்கம் வாழ்க்கை பயணத்தில் திசை மாறும் தருணங்கள், உறவுகளில் ஏற்படும் இடர்பாடுகள், நம்பிக்கை இருந்தும் ஒளி மறையும் நிலைகள்- இவை அனைத்துக்கும் காரணமாக வெளிப்படையாக விதி தோன்றினாலும், உண்மையில் அது மனித நன்னடத்தை தவறும் இடங்களில் உருவாகும் விளைவு என்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது. இயற்கையும் வாழ்க்கையும் ஒரே சிந்தனைப் பாதையில் இணையும் தத்துவப் பின்னணியே இதன் சூழல். கவிதை பொருள் உணரா பயணத்தில்- இருள் எதிர்த்த விடிவெள்ளி திசை உணர்த்த நினைத்தாலும், கரை படிந்த வெண்முகில் மதி மறுத்தும், இடை வலுத்தும், இமை தூரிகை இதமாய் சம்மதித்தாலும், தடையும் தரமற்றதாகும் நன்னடத்தை தவறிய விதியால்.. தென்றல் அசையும் மாடத்தில், வெண்மலர்கள் தரை தவழ்ந்து நறுமணம் சூழும் தருணத்தில், வேரறுத்த சூறைக்காற்று இடர் ஏற்று, நிலை குலைத்தது நன்னடத்தை தவறாய விதியால்.. உறவு பாலம் தழைத்து வாழையின் வரிசை தொடர்ந்தாலும், வசை பாடும் கரையான் கூட்டம் அரிக்க நினைத்தது: பாதை தகர்ந்தது நன்னடத்தை தவறிய விதியால்.. மேற்கில் திசை மறைத்தாலும், கிழக்கில் உதயமாகும்,  எனும் தருணத்தில் காற்றழுத்தம் மேலோங்கி, ஒளியும் முடங்கி போனது, நன்னடத்த...

கானல் நீர்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இல்லாமையின் மூலம் சொல்லப்படும் இருப்பை பேசுகிறது. இயற்கை, கலை, மரபு, உணர்வு, பெண்ணியம் - எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய அடிப்படை பண்புகள் மறுக்கப்பட்டுள்ள ஒரு உலகம் வரிசையாக உருவாக்கப்பட்டுள்ளது. கவிதை முகில்  இடறிய  வானம், பனி படறா புல்வெளி, அலை  உறங்கும் கடல், இலை வருடா பூங்காற்று, பெண்மை மறைத்த நளினம், வாழை மறுத்த விருந்தோம்பல், திசைகள் கலைந்த பூலோகம், கார் முகில் பழித்த மயில்தோகை, தூரிகை துறந்த அழகோவியம், தளபதி முன்மொழியா போர்முழக்கம், ஜதி இணையா நாட்டியம், மழை நனையாத மலையருவி, மழலை உணரா தாலாட்டு, தேரடி காணா தேரோட்டம், இரவு விழித்திராத விடி வெள்ளி, மலர்கள் நுகராத தேனீக்கள், வெயில் வடித்த வானவில், வரலாறு பதியாத செப்பேடு, சுமை விழுங்கிய பெண்ணாற்றல் கண்டும், காணாமலும் அசைப்போடும் சிலை வடித்த முகபாவம் கானல் நீரில் கரையும் உயர்வு பெற்றது.

இரு

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இயற்கை, மனித சமூகம், மனம், காலம் ஆகிய அனைத்திலும் இயல்பாக இனைந்து வாழும் இரட்டைத்தன்மைகளை(  இருள்- ஒளி, நன்மை- தீமை, அன்பு- பகை, பிறப்பு- இறப்பு) தத்துவ  ரீதியாக ஆராய்கிறது. எதிர்மறைகள் ஒன்றுக்கொன்று எதிராக அல்ல: ஒரே பயணத்தின் இணைநடப்பாளர்கள் என்ற பார்வையை முன் வைக்கிறது. நொடிகள் ஓடிக்கொண்டே இருந்தாலும், அந்த ஓட்டத்திற்குள் மனிதன் தேடும் ஓய்வு, அர்த்தம், சமநிலை ஆகியவற்றை கவிதை சுட்டிக்காட்டுகிறது. கவிதை இயற்கையின் வசிப்பிடத்தில் இரவும் பகலும், முகம்காட்டா விருந்தினர்கள். கதிரவனின் தாகம் தீர்க்கும் அடர்ந்த கோப்பைக்குள் இருளும் வெளிச்சமும், விண்வெளி சாயல்கள். இறைவன் காணும் நடைப்பாதையில் நன்மையும் தீமையும், கைகோர்க்கும் வழிபோக்கர்கள். மனிதன் ஆளும் சமூகத்திற்குள் அன்பும் பகையும், ஓயாமல் அசையும் ஊஞ்சல்கள். மதி வளர்த்த கணிதத்தில் ஒன்றும் நூறும், துணை விரும்பா ஆற்றல்கள். வெளிச்சத்தில் கண்விழித்தும், இரவில் கண்ணசரும் பயணத்தில் பிறப்பும் இறப்பும், சலிப்பில்லா மரபு சூழற்சிகள். மனம் புதைந்த உயிர் வட்டத்திற்குள் இன்பமும் துன்பமும், வெற்றிடம் கண்காணிக்கும் உளவாளிகள்...

நினைவுகள்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனத்தின் அனுமதி- மறுப்பு, உணர்வுகளின் நுழைவாயில், நினைவுகளின் சுழற்சி, மற்றும் மனிதன் உலகில் பதிக்கும் தடத்தின் தத்துவத்தை பேசுகிறது.  முகவரி இல்லாத எண்ணங்கள், அனுமதி பெறாத உணர்ச்சிகள் கோபமாக மாறும் விதம், மென்மையை உணரத் தெரிந்த பாதங்களுக்கும், காலச் செருக்கில் கரடுமுரடாகிய பாதங்களுக்கும் இடையிலான வேறுபாடு இங்கு வெளிப்படுகிறது. இயற்கையின் வடிவமைப்பில் மனிதன் பதிக்கும் கால் சுவடுகள் உலகின் சமநிலையைச் சிதைக்காமல், மாறாக இரு துருவங்களையும் இணைத்து கேட்க முடியாத இன்னிசையோடு அண்டம் நடனமாடும் என்ற தத்துவ உணர்வை கவிதை எடுத்துரைக்கிறது. கவிதை முகவரி இல்லாத வரிகளின் தொகுப்பு- மனதிற்கு மட்டும் புலப்படும் சம்பவங்களின் அணிவகுப்பு. மனதின் அனுமதி பெற்று, இதய வாசலில் நுழைய காத்திருக்கும் பயணச்சீட்டு, அனுமதி இல்லாததால் கோபத்தணலில் வெளியேறும் வன்மங்கள். இதழின் மென்மையை உணரும் பாதங்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலின் வெளிப்பாடு., காலச்செருக்கில் முட்களை பதம்பார்த்த பாதங்கள், நினைவெனும் காலச்சுழற்சியை அனுபவிக்க தகுதியற்றவை. உலகின் வடிவம் இயற்கை சார்ந்தது என்றாலும் உயிராய...

நிறம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை " நிறம்" என்பதை வெறும் கண்ணுக்குப் புலப்படும் தோற்றமாக அல்லாமல், இயற்கை, உயிர், காலம்,  இளமை, முதுமை ஆகிய அனைத்தையும் இணைக்கும் ஒரு மௌன சக்தியாகப் பார்க்கிறது. மலர்கள், பசுமை, இரத்த ஒட்டம், கூந்தல், சூரியன் போன்ற  உவமைகள் மூலம் நிறம் வாழ்க்கையின் தொடர்ச்சி, பாதுகாப்பு, உயிர்ப்பாடு மற்றும் அமைதியான பயணம் என்பவற்றிறன் அடையாளமாக வெளிப்படுகிறது. கவிதை நிறம் என்னும் மாயை, காற்றில் கரைந்திருக்க, இரகசியம் அறிந்த மலர்கள்  காற்றோடு உறவாடி, நிறமெனும் இயற்கை ஆபரணம் அணிந்து, வழிவழியாய் அழகின் மகுடம் சாயாமல் வீற்றிருக்கின்றன. பூமியின் கட்டுடல் தளறாமல் இருகப்பற்றி, சேவகனாய் கற்காலம் தொட்டு இன்று வரை கவசமாய், பசுமையாய் விழித்திருக்கும் வண்ணம் நிறத்தின்  தளபதி. உயிரின் தாகம்  தீர்க்க வற்றாது பாய்ந்தோடும் செந்நீர், செவ்வானம் நிறம் தொட்டு உடலெனும் கூட்டுக்குள் வளைந்து நெளிந்து வற்றாது சப்தமின்றி பயனிக்கும். இளமை என்னும கருங்கூந்தல் வெந்நிற  முதுமைக்குள் ஒளிந்திருப்பதைப் போல, நிறத்தின் உவமைகள் கைக்குள் அடங்காதவை- கதிரவனின் ஒற்றைக் குடைக்குள...

புதுமை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை, இயற்கையின் முரண்களில் மறைந்திருக்கும் அற்புதங்களை வெளிப்படுத்துகிறது. ஆழ்கடல்- அமைதி, பாலைவனம்- பசுமரம், மௌனம்- முழக்கம் போன்ற எதிர்மறை நிலைகளின் சங்கமம் மூலம் உயிர், உணர்வு, சுவாசம், தாகம் ஆகியவை ஒரே மேடையில் நிகழும் புதுமைகளாகக் காட்சியளிக்கின்றன. மனிதன் மொழியால் வரையறுக்க முடியாத அழகுகள், இயற்கையின் அரங்கில் இயல்பாகவே அரங்கேறுகின்றன என்பதே கவிதையின் மைய உணர்வு. கவிதை ஆழ்கடல்    மிதக்கும் அமைதி, முழு நிலவில் தும்பையின் பிரவேசம், ஓலையின் வரிசையில் கண்சிமிட்டும் கதிர்கள், மௌனத்தின் துணைசேரும் வெண்சங்கு முழக்கம், நீர் சுரக்கும் கருவறையில் காற்றின் வெற்றிடம், பட்டின் இழை தாங்கிய மேலாடை, பாலையில் நீர்சுரக்கும் பசுமரம், பனிகாட்டில் தத்தி நடக்கும் உயிரோவியம், காற்றருவியில் சுவாசம் பதித்த  மூலிகைகள், நேர்திசை மறவா மழைத்துளி பயணம், மலர்கள் சுவைத்திடாத தேன் விருந்து, துகள் வென்ற வெப்பத்தின் பெண் ஆபரணம், கடல் தணிக்காத நன்னீர் தாகம், இலக்கில்லா வட்டத்துக்குள் இரைதேடும் தீச்சுடர், நடுநிசையில்  துயிலுரியும் மலரினம், எழுத்துக்களின் வரையரைக்குள் தென்படாத அ...