இடுகைகள்

நான் உணர்ந்த தலைவன்

படம்
  உள்ளடக்கம் இந்தக் கவிதை தியாகம், தவம் நேர்மை ஆகியவற்றின் வழியே உருவாகும் ஒரு நவீன தலைமைத்துவத்தைப் பிரதிபலிக்கிறது. அதிகாரம் அல்ல பொறுப்பு என்பதே உண்மையான  தலைமை எனக் கூறும் கவிதை. கவிதை தவம் கலைத்த இந்தியத் தாயின் தலைமகனுக்கு... வாய்மை வழித்துணையானதால் வறுமை பிழையில்லை என திலகம் தொலைத்த  நெற்றியில் தன் விருப்பம் சுருங்கி தியாகம் விழியில் ஒளிவீச - மூன்று புறமும் நீர்சூழ்ந்த நிலமாளும் சுடர் தென்பட்டதால் உடல் வருத்தி, பாதை வகுத்தாய் மனை துறந்து மானுடம் காக்க. வடக்கில் தடம் வலுத்த பாதம் தென்தேசத்தில் கம்பன் நிலம் படர்ந்ததால், காலம் சுமந்த பாரதம் மீண்டும் புத்துயிர் பெற, சுதந்திரத்தின் நூற்றாண்டில் வாகை சூடி, உலகம் புகழும் உத்தம தலைவனாய், யோகம் வளர்த்த உடல் மெருகேறி வையகம் போற்றும் எங்களுள் ஒருவனாய் வாழும் ஆரவாரத்திற்கு குறைவில்லை, தலைமையில் மாற்றமில்லை. உன் நேர் பார்வையில் கண்டமும் கதைசொல்லும் மனிதத்தின் புகழ் ஓங்கும். பெண்ணின் துயரம் உன் தோல் சேர்ந்ததால் கருணையையே காரியமாக்கி தாயானாய். தேசத்தின் பாதுகாப்பிலும், நிதி பகிர்விலும் பெண்கரம் வலுத்ததால் தந்தையுமானாய். சைவமும் வ...

நிழலும் நிஜம் தேடும்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன்  அனுபவிக்கும் சோர்வு, மன மறுபிறவி, அன்பின் அரவனைப்பு மற்றும் இயற்கையோடு ஒன்றும் வாழ்க்கை சுழற்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டது. கவிதை தரை தொட்ட கணம் பொழுதும் சோர்ந்து போய், ஓய்வின் நுழைவாயில் சேர்ந்தும்,சேராமலும் என் கண்கள் ஒளி பெற காத்திருந்தது. கருவறை துறந்த மறுகணம் மனம் உதித்த தளிர் மேனியில் காலமும், பட்டும் படாமல் என்னை வரவேற்கிறது என சலனம் தழுவியது. செவி திகட்டா சொல்லழகும், தோய்வரியா அரவனைப்பும், என் நிழலின் மறுஉருவமாய் விரலின் வேலிக்குள் புறம் செழித்தது அகமும் குளிர்ந்தது. மதி வளர்த்த கல்வியும் உறம் சேர்த்த உறவும் வண்ணம் போர்த்திய கனவும் அழகாய் பாதை தொடுத்தது. கரை சூழ்ந்த பூங்காற்று நீரோடையின் வழி கொண்டு மறுகரை சேர்ந்தது. வெண் மேகம் கரை படிந்து ஒளியும் கண் மறைத்தது.  மழைத் துளியில் மாசகன்று வளமாய் வாழ்வதும் காற்றில் ஈரம் கரைந்து நிலம் தாகம் கொள்வதும் இயற்கையின் அரவணைப்பில்..

இலக்கு

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இருள்- ஒளி, வறுமை- அதிகாரம், அமைதி- அதிக சப்தம், இயற்கை- மனித அறிவு ஆகிய எதிர்மறை நிலைகளுக்கிடையே மனித மனம் மேற்கொள்ளும் அமைதியான தேடல் பயணத்தை  பேசுகிறது. கவிதை இரவின் மணித்துளிக்குள் ஒளியின் நொடி தேடும் விழிகள். குடைந்த பாறைக்குள் தாகம் தீர்க்க நினைக்கும் மனம். நிலவு சேர்த்த பகலில் ஈரம் காயும் புல்வெளி. வறுமை புதைந்த நிலத்தில் பகட்டின் கனி சுவைக்கும்  அதிகாரம். அடர்ந்த கானகத்துள் விதை தேடும் விலங்கினம். பறவையின் இறகில் உலகம் அளக்கும் விஞ்ஞானம். ஆழ்கடலின் அலையோசையில் மௌன மொழி பேசும் மீன்கள். செம்மொழியின் நிலப்பரப்பில் புதியதோர் அத்யாயம். மண் புதைத்த உறைவிடத்தில் காற்று தீண்டா தீபச்சுடர். இனம் தோற்ற வைகரையில் மாசில்லா வெண்மலர் கூட்டம் அமைதியின் பயணம் நோக்கி இதழ்விரித்து புன்னகைக்கிறது.

நோக்கம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இயற்கை, மனிதன், காலம் மற்றும் வாழ்க்கை ஆகிய அனைத்தும் எதை நோக்கி நகர்கின்றன என்ற அடிப்படை தத்துவக் கேள்வியை முன்வைக்கிறது. கவிதை வானம் போர்த்திய நிலமும் போர்வை துளைத்த நட்சத்திரங்களும் எதை நோக்கி.. மண் கலந்த வாசமும் மழையறியா விரிசல் நிலமும் எதை நோக்கி.. வெப்பம்  ஈன்ற தீப்பொறியும் தாவரம் தழைக்காத வெண்ணிற பூமியும் எதை நோக்கி.. பிறப்பு சுமக்கும் இரகசியமும் முடிவரியா பயணத்தின் தொடர்கதையும் எதை நோக்கி.. சூரியன் மறைந்த நல்லிரவும் வெளிச்சம் பரிமாறும் நில வொளியும் எதை நோக்கி.. பற்றில்லா புறம் காணும் துறவும் ஆசையின் பொதி சுமக்கும் மானிடமும் எதை நோக்கி.. சமூகம் வரைந்திடாத ஓவியமும் வண்ணம் தீட்ட பாயும் கரங்களும் எதை நோக்கி.. இரு விழிகளின் காட்சியும் ஆயுள் மறந்த பூமி சுழள்வதை நோக்கி..

பயணம்

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் இயற்கையுடன் மேற்கொள்ளும் பயணத்தைச் சொல்லும் ஒரு உணர்வுப் பதிவு. பூமி மனிதனுக்குச் சொல்வது ஒன்று மட்டுமே- நாம் உரிமையாளர்கள் அல்ல: விருந்தினர்கள். கவிதை பாதங்கள் இளைப்பாற விழிகள் மட்டும் விழித்திருக்க கிழக்கும்,மேற்கும் ஒரு சேர வரவேற்க, மேகங்கள் வெண் கம்பளம் விரிக்க காற்றும் இலை தழைகளும் சாமரம் வீச, யுகங்களாய் முதுமை தழுவாத பூமி பெண்ணின்  இருப்பிடம் காணும் முனைப்புடன் ஒரு பயணம். பச்சை நிலப்பரப்பில் நிறங்கள் ஏழு வண்ணம் தீட்ட, சாரல் மழை  சந்ததி வளர்க்க, செழுத்திருக்கும் பசுமை கூட்டுக்குள் அனுமதியின்றி கால் பதித்ததால் செந்நிற சீற்றத்துடன், தலைவிரிக் கோலமாய் நில மகள் தன்னைத் தானே அழித்த சுவடுகள், அச்சுருத்தும் நிஜங்கள். விண்கற்களின் உயிர் நடுங்கும் ஒலி பூமியின் சமநிலை குன்றியதால் இயற்கையின் சுற்றத்தார் விடுக்கும் எச்சரிக்கை. நிலத்தின்  மூதாதையர் வாழும் நீல போர்வைக்குள் புதைந்திருக்கும் மர்மங்களை கட்டவிழ்க்க முற்பட்டதால் பேரலை என்னும் பேரிடரால் மனித கூட்டம் வாழ்வை இழந்தது. விதிக்கப்பட்ட எல்லைக்குள் விருந்தினராய் அகம் மகிழ்ந்து வா...

இயற்கை

படம்
உள்ளடக்கம்  இந்தக் கவிதை விடியற்காலையில் என் முற்றத்தில் நிகழும் சிறிய- சிறிய இயற்கை செயல்களை கவனித்ததில் இருந்து பிறந்தது. இயற்கை பேசுவதில்லை: ஆனால் நம்மை சிந்திக்க வைக்கின்றன. கவிதை நீலவானம் ஒற்றை  கண் விழித்து பூமிக்கு ஒளி தரும் தருணம் இலை என்னும் போர்வை நகர்த்தி விடியலை வரவேற்கும் பறவைக் கூட்டங்கள். அழையாத விருந்தாளியாய் மலரின் இருப்பிடம் சென்று தேனை சுவைக்கும் தேனீக்கள். ஆங்காங்கே  சிதறிக்ககடக்கும்  சிறகும், இலை சரகுகளும் தனக்கென காத்திருந்ததைப் போல  தன் கூட்டை அலங்கரிக்க நயமாக சேகரிக்கும் சிட்டுக் குருவிகள். தானியங்களை பின்னங்காளில் இளைப்பாறி பற்களின் இன்னிசையோடு உண்டு மகிழும் அணில்கள். செயற்கை  ஆற்றலோடு போட்டியிட்டு மண் சிதறாமல் ஊடுருவி சத்துக்களை கொடிகளுக்கு பரிசளிக்கும் மண் புழுக்கள், தாவர நண்பன். தனக்கு அடைக்கலம் தந்த தோழனின் ஆயுள் வேண்டி இலகால் பொந்தமைத்து காவல் நிற்கும் மரங்கொத்தி பறவைகள். என் இமைகள் மலர வரம் கொடுக்க என் முன் தோன்றும் கருங்குருவி என் வாழ்க்கை பாதையின்  திடமான நம்பிக்கை. என் முற்றத்தில் என்முன் நடந்தேரிய இயற்கை ந...

நிழல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் வாழ்க்கைப் பயணத்தில் சந்திக்கும் உள் நிழலைப் பற்றி பேசுகிறது. தடுமாற்றம், பிழை, இருள், மனக்குழப்பம் ஆகிய தருணங்களில் அது காவலாய், வேலியாய் கைகொடுக்கும் சக்தியாக செயல்படுகிறது. நினைவுகள் இருளை சூழ்ந்தாலும், அவை நிலைத்தவை அல்ல: நொடி பொழுதில் கரைந்து போகும் நிலையற்ற உண்மையென கவிதை நம்பிக்கையுடன் முடிகிறது. கவிதை நிழல் தாங்கும் பாரம் நிஜங்களின் எல்லைக்குள் பயணிக்கும் வரை எட்டி நின்று காவல்காக்கும் பிழை பொறுத்து கண்களின் காட்சி தடுமாறும் வேகத்தில் பாதை சீர் பெறும்வரை வேலியாய் பின் தொடரும் மனம் தடுமாறி நடை தடம் மாறி வெறுமையான காட்சிகளின் எதிரில் நின்று கைகொடுக்கும் நிலம் சூழ்ந்த இருள் நினைவிலும் தொடர்ந்து வர நொடி பொழுதும் தாமதமில்லாமல் கரைந்தே போய்விடும்.