இடுகைகள்

எல்லை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்க்கை இயற்கையின் சட்டங்களைப் போல எளிமையுடனும், உண்மையுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது போல தோன்றுகிறது. இயற்கை எந்தச் செயலும் எதிர்பார்ப்பின்றி தன் இயல்பின்படி நடைபெறுகிறது. மலர் நறுமணம் தருவதற்கு யாருடைய முகவரியும் தேடவில்லை.  விதை முளைக்க முன் ஆய்வு செய்வதில்லை. கதிரவன் உதித்து மறைவது அவனது கடமை. அதேபோல் மனிதனும் தன் பண்பை காத்து வாழ வேண்டும். கர்வம், சீற்றம், கண்ணியமின்மை போன்றவை இயற்கையின் சீரிய ஒழுங்கில் இடமில்லை என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. மனித சமுதாயம் இயற்கையைப் போல் சீராக இருந்தால் அதுவே இறை உணர்வை அடையும் வழி என்னும் தத்துவப் பின்னணியில் இந்தக் கவிதை அமைந்துள்ளது. கவிதை மலரில் கரைந்த நறுமணம், காற்றின் முகவரி தேடுவதில்லை. சுவை கலந்ந கனியின் மொழி, புலமைக்கு காத்திருப்பதில்லை. விதை உண்ட செம்மண், பசுமை உமிழ ஆராய்வதில்லை. தரை பயணம் முடியும்வரை, மழை நீர் துணைசேர்வதில்லை. மீன்களின் ஆயுள் முடியும்வரை, நாரைகளின் தவம் கலைவதில்லை. இலைகள் ஆடும் நாட்டியத்தை, இடியின் தாளம் நிர்ணயிப்பதில்லை. நாணம் புதைத்த பெண்ணின் உருவம், கர்வம் சேர்க...

அலைகள்

படம்
உள்ளடக்கம் " அலைகள்" - வாழ்க்கையை ஒரு தொடர்ச்சியான உள் மற்றும் வெளிப்புற பயணமாகப் பார்க்கும் கவிதை. இங்கு நிழல்கள்  என்பது கடந்த கால ஆனுபவங்கள், நினைவுகள், வேதனைகள், தோரணம் என்பது அவற்றை அலங்கரித்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை- உண்மை( நிஜம்) என்பது வெற்றிடத்தையும், வேகத்தையும் தன் வசப்படுத்தும் சக்தியாக வர்ணிக்கப்படுகிறது- அது அழகிய நிறங்களைக் கூட கரைத்து விடும் ஒரு துல்லியமான அனுபவமாக. பிரிவு, வறுமை, தோல்வி போன்ற வாழ்க்கையின் கட்டங்கள் இங்கு சோகமாக அல்ல, பரிணாம நிலைகளாக பார்க்கப்படுகின்றன. பின் நோக்கிய நினைவுகள் குவிந்தாலும், முன்நோக்கிய பயணம் நிற்கவில்லை. வறுமை தடையாக இருந்தாலும், கானலில் கூட  பசுமை முளைக்கும் என்பது போல் நம்பிக்கை மறையவில்லை.' இரு துணையின் ஒற்றை பல்லக்கு' என்பது காலத்தின் சுமையையும் உறவின் நிலைத்தன்மையையும் ஒரே உருவகத்தில் இணைக்கிறது. கவிதையின் இறுதியில் தன்னுயர்வு முக்கியமாகிறது. வெளிப்புற உலகின் குழப்பம், தர்க்கம், சிதைவு ஆகியவற்றை கடந்து, தனி மனிதன் தனது உள்ளார்ந்த மகுடத்தை அடையும் நிலை வெளிப்படுகிறது. வாழ்க்கை ( கதம்பம்), ஆனால்  ஒரு விதை போல் மனிதன்...

வறுமை

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை, வறுமையை ஒரு பொருளாதார நிலையாக அல்லாமல், மனித உடல், உயிர், சுவாசம், காலம் மற்றும் சமூக அடுக்குகள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும் முழுமையான அனுபவமாகப் பதிவு செய்கிறது. வாய்ப்புகள் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் சமூக வாசல்கள், அடிப்படை தேவைகளே அடைப்பாக மாறும் வாழ்வியல் சூழல், உயிர் காக்க வேண்டிய ஆதிமூல சக்திகள் உயிர் கெடுக்கும் பசியாக உருமாறும் நிலை ஆகியவை இதில் தீவிரமாக வெளிப்படுகின்றன. இறுதியில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் கம்பீரம் மேல்தளத்தை அசைக்க முனைவது மூலம், ஒடுக்கப்பட்ட வாழ்வின் அடக்கமில்லாத எதிர்ப்பும் மறைந்த வலிமையும் உணர்த்தப்படுகிறது. கவிதை முழுமை பெற்ற அடித்தளங்கள் காற்றில் பயணிக்க தேர்ந்தெடுக்கப்படாதவை- நிறைவாகிய வாசல் வரவேற்கவும் அனுமதி இல்லாதவை. வறுமையின் பிடியில்- செந்நீர் ஊற்று ஊடுருவ மறுக்கும், வெள்ளைக் கூட்டின் நகலாய் படர்ந்திருக்கும் மேலாடை சுருக்கமும் விரிவடைய மறுக்கும், ஆதி மனிதனின் உயிர் வளர்த்த நெருப்பு, பசியாய் உருவெடுத்து உயிர் கெடுக்க இசையும், உடல் சுமக்கும் பாதங்களும், தடம் காணும் கைகளும் பாரமென மண்ணில் இளைப்பாற நினைக்கும், விழித்தி...

பெண்ணெனும் நான்........

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை கருவறையில் உருவாகும் உயிரின் பயணத்தை அதன் உணர்வுகளுடன் விவரிக்கிறது. வடிவமில்லா சிறுதுகளாகத் தொடங்கி இயற்கையின் அருளால் வடிவம் பெற்று தாயின் வெதுவெதுப்பான பாதுகாப்பிலும், தாலாட்டிலும் வளர்ந்து, இறுதியில் பெண்ணாக உருவெடுக்கும் ஆன்மிக- உடல் பயணமே இதன் மையம். தாய்- குழந்தை உறவு, உயிரின் தோற்றம், பெண்ணின் பிறப்பு மற்றும் அவளுக்குள் புதைந்துள்ள உயிர்சக்தி ஆகியவை கவிதையின் ஆதார உணர்வுகள். கவிதை கருவறை எனும் கோப்பைக்குள் உயிரெனும் ஆற்றலோடு, வடிவமிலா சிறுதுகலாய் அங்கும், இங்கும் அலைந்து ஓரிடத்தில் இளைப்பாறினேன். இயற்கை வரமளித்த இரு இனங்களின் ஓரினமாய், காற்றும் செந்நீரும் ஒரு சேர கலந்து, கருவண்ணம் ஆட்கொண்ட அறையில் சலனமில்லாமல் வீற்றிருந்தேன். தனிமையில் நான் உறங்க இருக்கரங்கள் பற்றிக்கொண்ட வெதுவெதுப்பில், ஓரு குரலின் தாலாட்டில் ஒவ்வொரு திங்களாய் பொலிவு பெற்றேன். என் அறையின் நீலம் அகலம் குறைய, உயிர் நீர் சுவாசம் தர, என் வாசல் எதுவென்று கொடியசைத்து வினவினேன். என் பாதம் தரைதொட, என் அறையின் நினைவுகள் காலத்தோடு பயணிக்க, என் அடி உடல் கனக்க என் தாய் எனக்கு பரிசளித்தா...

நானும் அவளும்

படம்
உள்ளடக்கம் இயற்கையின் மடியில் மலர் ஒரு உயிராகப் பிறந்து, மொட்டாகி, மலர்ந்து வண்ணத்துப் பூச்சிகளுடன் உறவாடி தன் வாழ்வை நிறைவு செய்து உதிரும் தருணம் வரை நிகழும் வாழ்க்கைச் சுழற்சியை இந்தக் கவிதை சித்தரிக்கிறது. உதிர்வு இங்கு இழப்பாக அல்ல: தொடர்ச்சிக்கான அமைதியான பிரியாவிடையாக வெளிப்படுகிறது கவிதை இலை  தாங்கிய  மொட்டுக்கள் இரவின்  காவலில் இதழ்  விரித்து, பனித்துளியில்  நீராடி, வெண்கதிரில்  இதழ்  உலர்த்தி, வண்டிசையின்  வரவேற்பில் தேவதைகள்  கைப்பட ஒற்றை  நாற்காலியில் வீற்றிருக்கின்றன. முட்கள்  பதித்த திரைமறைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட  வண்ணங்களை, ஓவியமாய்  தீட்டப்பட்ட  இறகுகள், காற்றினும்  மெல்லிய  இடை  விரிந்து, இயற்கை  பகிர்ந்த  பருவ கால இரகசியத்தை கொண்டு  சேர்க்கும் வண்ணத்து  பூச்சி மலரின்  உற்ற தோழன். எண்களின்  முதன்மையாய் வரிசைகள்  பின்தொடரும் ஒற்றை  பொழுதின், விதி சுமந்து இயற்கையுடன் ஒன்றென கலந்த உயிரின்  இழப்பை, மலர் பொழிந்து, பிரியாவிட...

களம்

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை மண், இனம், வேர், கொடி, தலைமை ஆகிய உருவகங்களின் வழியாக ஒரு சமூகத்தின் அரசியல்- பண்பாடு பயணத்தை பேசுகிறது. மண்ணின் தாகம் என்பது அடக்கப்பட்ட மக்களின் உயிர்த்தாகமாகவும், ஊற்றாய் உயிர் வளர்ப்பது கூட்டு முயற்சியையும் குறிக்கிறது. வேர் - விதை- துளிர் என்ற இயற்கை சுழற்சி இனத்தின் தொடர்ச்சியையும், காலத்தை கணிக்கும் அரசியல் விழிப்புணர்வையும் காட்டுகிறது. தனிநபர் அல்ல, கூட்டு உணர்வே தலைமை எனும் கருத்து, " தலைவனின் இலக்கணம்" பகுதியில் வலுவாக நிறுவப்படுகிறது. கவிதை மண்ணின் தாகம் ஊற்றாய் உயிர் வளர்க்க, பாதம் பதிந்த நிலமும் ஒரு குரலில் சுவாசிக்க, என் இனம் எனும் வேர் கரங்களை கட்டி மையத்தில் சின்னம் ஏற்றி, கொடியாய் சிகரம் தொட்டது. கோபுரமாய் உயர்ந்த மணல் திட்டுக்கள், காற்றின் சுழற்சியில் திசை நான்கில் பயணித்து தாய் கொடியின் நகலாய், கலம் காண பயணிக்கின்றது. இனத்தின் உயிர் புதைந்த வேர் காலத்தின் கணிதனாய், உள்ளும் புறமும் நன்கறியும்- காற்றில் அலைப்பாயும் சரகுகளை உரமாய் தன்னுள் வளர்த்து, காட்டாற்றின் நீரை நெறிப்படுத்தி, தன்னுள் ஈர்த்துக்கொண்டு பருவங்கள் எதிர்நோக்கி, துளிர் ...

முரண்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் தனது உடல், உணர்வு, காலம் மற்றும் உறவுகளுடன் எதிர்கொள்ளும் மாற்றங்களை அச்சமின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வெளிப்படுத்துகிறது. உயர்வு- தாழ்வு, இளமை- முதுமை, தனிமை- துணை போன்ற இருமைகளின் நடுவில் நின்றும், அகந்தை அல்லது தளர்வு இன்றி தொடரும் சுயநிலையே இதன் மைய சூழலாக அமைகிறது. ஒவ்வொரு செயல்பாடும் பயத்தின் மறுப்பாகவும், விழிப்புணர்வின் உறுதியாகவும் பதிவு செய்யப்படுகிறது. கவிதை தலைக்கனம்  மதிகெடுக்கும்  என உச்சி நிமிர ஆராய்வதில்லை, இமைகள்  விடைப்பெறும் என விழிகள்   விழித்திருக்க  தயங்குவதில்லை, சுவாசத்தின்  பரிமாற்றம்  அழற்சி  தருமென கண்களின்  நேர்கோடு  விலகுவதில்லை, நாவின்  உரசல்கள்  பிளவுபடும் என உதடுகள்  பிரிந்திருக்க  அஞ்சுவதில்லை, ஒலியின்  நீளம் மிகினும், குறையினும் துருவங்கள்  ஒன்றினைவதில்லை, கரங்களின் நேர்த்தியை முதுமை பின்தள்ளும்  என விரல்கள் நடுங்குவதில்லை, பாதங்களின்  அழுத்தத்தை கைத்துணை பகிர்ந்துகொள்ளும்  என நடை தளர்வதில்லை, ஒரு நொடி  ...