இடுகைகள்

கனம்

படம்
ஈரம் மறுத்த வளம் சுவாசத்தின் சுமை, கனி விரும்பா கொடியினம் நாவிற்கு சுமை, இதழ் சுருங்கிய மலர்கள் அழகிற்கு சுமை, இருள் அணைத்த மின்விளக்கு விழிப்பதற்கு சுமை, கிளைகளின் குடியிருப்பில் புயலின் வரவேற்பு சுமை, நீர்  பருகிய நிலம் வறட்சியின் சுமை, முகில் ஊடுருவும் பயணத்தில் நிலம் தாங்கும் உயிர்கள் சுமை, பண்பட்ட இதயம் ஊடலில் சுமை, மௌனம் கலைத்த விழிநீர் இரகசியத்தின் சுமை, இரவில் விழித்திருக்கும் நினைவுகள் நிம்மதியின் சுமை, கற்பனையின் அலைவரிசையில் மெய் வருடும் நுனிவிரல் சுமை, நிசப்தம் உறங்கும் நிலத்தில் முகவரி தேடும் காற்றொரு சுமை, கைவலையின் கலகலப்பில் மழலையின் நித்திரை சுமை, முகம் மலர திரையிட்ட காலங்களால் பிறவியும் சுமை. ஆற்றாமையின் துணையில் நிழல் சாய்வதும் சுமை- அழைத்துச் செல்ல  வலிமையில்லை பின்தள்ள புரிதலுமில்லை..

அணங்கு

படம்
உள்ளடக்கம் " அணங்கு"  என்னும் சொல் சங்க இலக்கியத்தில் பெண்ணைக்  குறிப்பதாகும். ஒரு தாயின் இதயத்தில் பிறந்த இக்கவிதை தன் மகளை  ஒளியாய், இனிமையாய், கருணையாய் காணும் உணர்வை வெளிப்படுத்துகிறது. மழலை சிரிப்பிலும், சிறு செயல்களிலும் வாழ்க்கையின் உண்மைமயான அர்த்தத்தை காணும் தாயின் பயணம் இது. கவிதை மின் மினியின் மகளாய் ஒளி பகிர்ந்து தந்தாய், தேனீக்களின் அரசியாய் சுவை உணர வைத்தாய், முத்தமிழின் மூத்தவளாய் மன்றம் ஏற்க வந்தாய், குழலின் மொழியாய் செவி சுவைக்க நின்றாய், கொடியின் இடையாய் பருவம் ஏற்று மலர்ந்தாய், மீன் வடித்த விழியாய் கருணை கற்று வளர்ந்தாய், மகிழ்ச்சியின் சாமரம் வீசி அகம் குளிர்வித்தாய், உருவமாய் எனை வளர்த்த என் உயிர் துடிப்பில்  கண் அயர்ந்து, என்  மூச்சில் குளிர் காய்ந்து, உன் தவம் கலைத்து என் பார்வையின் நிழலில், நீ அறிந்ததை மழலை மொழியில் விளக்க துடித்தாய், சுவையின் இலக்கணமாய் நாவில் தவழ்ந்த  இசையயை மெய் மறந்து ஆற்றலானேன். பிறவி ஏழும் பொய்யானது உறவின் தாகம் தணியாமல்:  முடிவுரையின்  தொடக்கமாய் உதித்தாய் கடந்த காலங்களின் சுமை விலகி முழுமையடைந்தேன். ...

பெண்ணெனும் நான்........

படம்
நாட்குறிப்பு பெண் என்னும் அகராதி சாபத்திற்குள் அகப்பட்ட வரம். பிறந்ந பாதையில் வரங்கள் பின்தொடர்வதுமில்லை, சாபங்கள் வழி மறுப்பபதுமில்லை. நிழலை உற்று நோக்கும் கனம், தனிமை முழுவதுமாய் ஆட்கொண்டிருக்கும். தனிமையில் இரவுக்கும், வெளிச்சத்திற்கும் வேறுபாடில்லை. உணர்வுகளின் துணைக்கொண்ட ஆற்றலின் வடிவம் சிகரம் கடந்து செல்லும். வழித்துணையின் பல்லக்கு அயராமல் சுமந்தாலும் இளைப்பாற ஒரு அடியேனும் தனக்கென பகிர்ந்திருக்க வேண்டும். உபயம் சேர்க்கும் கற்சிலையாய் ஊர்வதை கடந்து, உளி செதுக்கிய பெண் உருவமாய் நகர்வது சிறப்பு. எண்ணங்களின் அலைவரிசை மனதின் இசையாய் வெளிப்பட, பாதங்கள் வண்ணத்தில் நனைந்திருக்க வேண்டும். இருளில் நிறம் மறைந்தாலும் செவிகள் இன்புற்று கடந்து செல்லும். நான் படைத்த " பெண்ணெனும் நான்" உணரவிருக்கும் காலத்தின் பரிணாமங்கள்... கவிதை கருவறை கோப்பைக்குள் உயிரெனும் ஆற்றலோடு வடிவமில்லா சிறுதுகளாய் அங்கும், இங்கும் அலைந்து ஓரிடத்தில் இளைப்பாறினேன். இயற்கை வரமளித்த இரு இனங்களின் ஒரு இனமாய், காற்றும், செந்நீரும் ஒரு சேர கலந்து கருவண்ணம் ஆட் கொண்ட  அறையில்,சலனமில்லாமல் வீற்றிருந்தேன...

அறியாதது

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை வாழ்க்கையின் பல பரிணாமங்களை ஆழமாக ஆராயும் தத்துவப் பயணமாகும். மண், மழை, விதி, காற்று, வானவில், போன்ற இயற்கை உருவகங்களின் மூலம் மனிதன் அனுபவிக்கும் உணர்வுகள், உறவுகள், உண்மை, துரோகம், நினைவுகள் ஆகியவை வெளிப்படுகின்றன. ஒவ்வொரு நிகழ்வுக்கும் அதை உணரும் தனித்தன்மை இருக்கிறது என்ற கருத்தை கவிதை வலியுறுத்துகிறது. இறுதியில் மனிதன் அறிந்ததாக நினைப்பது எல்லாம் அறியாமையின் தொடக்கமே என்றும், விழித்திருந்தாலும் முழு பார்வை இல்லாத நிலையிலேயே வாழ்கிறான் என்றும் ஒரு ஆழமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. கவிதை மண் புழுதியின் ஏக்கம் மழை சாரல் அறியும். விண்கல் பயணம் ஆழ்துளை அறியும். விழுதுகள் படரும் நேரம் விதி அறியும். பிறப்பின் காலம் வம்சம் அறியும். எண்ணங்கள் அசைபோடும் வேகம் காற்று  அறியும். உயிர்தூறல்  எதுவரை வாழ்நாள் அறியும். நிறங்களின் ஆயுட்காலம் வானவில் அறியும். உண்மை இடறிய கணம் துரோகம் அறியும். நிலையில்லா நிலத்தின் அகந்தை கல்தூண் அறியும். கடந்த காலத்தின் சுமை வரும்காலம் அறியும். வீரத்தின் வலிமை மகுடம் அறியும். புலமை புகுந்த வரிகள் மொழி அறியும். உறவில் பதிந்த கீறல்கள...

தூண்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை,' துணிவு' என்ற கருத்தை பல அடுக்குகளில் வெளிப்படுத்துகிறது. இரவின் அமைதியிலும்  அச்சத்திலும் உயிரை தாங்கி நிற்கும் தனிநபர் மனநிலையிலிருந்து தொடங்கி, போராட்டங்களிலும் வரலாற்றிலும் சிறு செயல்கள் பெரிய மாற்றங்களை உருவாக்கும் சக்தியாக மாறுகிறது. மனித அகந்தைக்கும் சமீக நீதிக்கும் எதிராக நிற்கும் மன வலிமை, பெண்களின் சுதந்திரக் குரல், முன்னோடிகளின் பாதையில் மீண்டும் எழும் புத்துயிர் - இவை அனைத்திலும் துணிவு ஒரு தொடர்ந்த உயிர்ப்பாகவும் படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மனிதனின்  தனிப்பட்ட தைரியம் அல்ல: மாறாக உயிரின் இயல்பாகவும், சமூக மாற்றத்தின் வேராகவும் இந்தக் கவிதை துணிவை காட்டுகிறது. கவிதை காற்றசையா வீதிகளில் இறகின் சுவாசம் நுகர்ந்து முகில் நெய்த கூரையில், இரவின் காவல் கண்களை மறைக்க உயிர் சுமப்பது துணிவு. துயில் ஆளும் ராத்திரியில் தரைப் படையின் மௌனத்தில் இருளின் அச்சம் கடந்து சிறு பொறி நிலமாளும்  வரலாற்றின் நம்பிக்கை- துணிவு. நீர் தழையும் நிலத்தில் இனம் காக்க  எல்லை  வகுத்து,  நிலம் செரித்து படையெடுக்கும் அகந்தை மாறா மனிதர்களின் தடை வளர்ப்பது த...

முடிவுரை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்வின் ஆழமான வெற்றிடத்தையும், நிறைவேறாத ஏக்கத்தையும் வெளிப்படுத்துகிறது.காலம் நகர்ந்தும் வாழ்க்கையின் அர்த்தம் தெளிவாக தெரியாமல் போகும்  ஓரு நிலையை இது காட்டுகிறது. வானம் விரிந்திருந்தாலும் அதன் எல்லை கண்களுக்கு எட்டாதது போல, மனிதன் தேடும் நிறைவு எளிதில் கிடைக்காததாகவே உள்ளது. மேகம் கரைந்து மழையாக  விழுந்தாலும் மண்ணின்  தாகம்  தீராதது போல வாழ்க்கையில் நிகழ்வுகள் பல வந்தாலும் உள்ளத்தின் பசி அடங்காமல் தொடர்கிறது. வெளிப்படையாக இயற்கை இயக்கம் நடைப்பெறுகிறது போல தோன்றினாலும் உள்ளார்ந்த வெறுமை நீங்காத ஒரு அமைதியான வேதனை இந்தக் கவிதையின் மைய உணர்வாக உள்ளது. இது தனிமை, தேடல் மற்றும் நிறைவை நாடும் மனித மனத்தின் நிலையை நுட்பமாக பிரதிபலிக்கிறது. கவிதை முடிவுற்ற காலங்கள் விழித்திருந்தும் வானின் நீளம் தென்படவில்லை. மேகம் கரைந்த நீர்துளிகள் சிந்தியும் மண்ணின் தாகம் தீர்க்கப்படவில்லை. நிலம் இருகிய பாறைகள் குடைந்தும் பூமியின் புதிர் விடுபடவில்லை. பிறவிகள் ஏழு கடந்தும் சூரியனின் கதிர்கள் குன்றியதில்லை. நொடியின்  இடையில் இமை மூடும் விழிகள் கரைந்தாலு...

உருவம்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை காற்றைப் போல கண்ணுக்குப் புலப்படாமல் உடலுக்குள் மறைந்திருந்து, படைத்தவனின் ஆனையேற்று, காலம் முடியும் வரை பயணிக்கும் உருவமில்லா உயிர் சேர்ந்தது. உயிர் உடலில் மறைந்திருக்கும் வரை நல்லாற்றலாய் செயல்பட வேண்டும் என்பதை மாசற்ற சூரியனின் ஒளியில் ஒரு துளியும் கலங்கம் சேர்க்காமலும், உப்பு கலந்த கடல் நீரிலும்  நன்னீரின் சுவை உணர்வதும், காற்று கலந்த பூமியில் என் சுவாசம் மட்டும் புதியதாய் தென்பட வேண்டும் என்னும் இயல்பையும்  ,ஐம்புலனும் உயிருக்குள் கட்டுப்பட்டு நன்மை தீமைகளை பிரித்து உணரவேண்டும் என்பதையும்,வானம் சூழ்ந்த நிலத்திற்குள் தீயவை தீண்டாத இருப்பிடத்தில்  வசிப்பதையும் கடைப்பிடிக்க, பிறப்பில்  நீர் சூழ்ந்த உடல் இறுதி காலத்திற்கு பின் மண்ணில் புதையுண்டு மறையும் வரை காற்றடைத்த உடலில் அமைதி காக்க வேண்டும் என்னும் பொருள் கொண்டு   "உருவம்"  கவிதை படைத்தது. கவிதை காற்றின் வம்சமாய், புதராடும் கூட்டுக்குள், கண்ணிருண்ட உருவமாய், சிந்தித்தவனின் சிரம் பற்றி, காலத்தின் கணக்கில் அடிபணிந்து, உயிரென உடல் சேர்ந்தாய். சுடர் விரியும் நன்பொழுதில், ஒரு த...

எல்லை

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனித வாழ்க்கை இயற்கையின் சட்டங்களைப் போல எளிமையுடனும், உண்மையுடனும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பிறந்தது போல தோன்றுகிறது. இயற்கை எந்தச் செயலும் எதிர்பார்ப்பின்றி தன் இயல்பின்படி நடைபெறுகிறது. மலர் நறுமணம் தருவதற்கு யாருடைய முகவரியும் தேடவில்லை.  விதை முளைக்க முன் ஆய்வு செய்வதில்லை. கதிரவன் உதித்து மறைவது அவனது கடமை. அதேபோல் மனிதனும் தன் பண்பை காத்து வாழ வேண்டும். கர்வம், சீற்றம், கண்ணியமின்மை போன்றவை இயற்கையின் சீரிய ஒழுங்கில் இடமில்லை என்பதை இந்தக் கவிதை உணர்த்துகிறது. மனித சமுதாயம் இயற்கையைப் போல் சீராக இருந்தால் அதுவே இறை உணர்வை அடையும் வழி என்னும் தத்துவப் பின்னணியில் இந்தக் கவிதை அமைந்துள்ளது. கவிதை மலரில் கரைந்த நறுமணம், காற்றின் முகவரி தேடுவதில்லை. சுவை கலந்ந கனியின் மொழி, புலமைக்கு காத்திருப்பதில்லை. விதை உண்ட செம்மண், பசுமை உமிழ ஆராய்வதில்லை. தரை பயணம் முடியும்வரை, மழை நீர் துணைசேர்வதில்லை. மீன்களின் ஆயுள் முடியும்வரை, நாரைகளின் தவம் கலைவதில்லை. இலைகள் ஆடும் நாட்டியத்தை, இடியின் தாளம் நிர்ணயிப்பதில்லை. நாணம் புதைத்த பெண்ணின் உருவம், கர்வம் சேர்க...

அலைகள்

படம்
உள்ளடக்கம் " அலைகள்" - வாழ்க்கையை ஒரு தொடர்ச்சியான உள் மற்றும் வெளிப்புற பயணமாகப் பார்க்கும் கவிதை. இங்கு நிழல்கள்  என்பது கடந்த கால ஆனுபவங்கள், நினைவுகள், வேதனைகள், தோரணம் என்பது அவற்றை அலங்கரித்து ஏற்றுக்கொள்ளும் மனநிலை- உண்மை( நிஜம்) என்பது வெற்றிடத்தையும், வேகத்தையும் தன் வசப்படுத்தும் சக்தியாக வர்ணிக்கப்படுகிறது- அது அழகிய நிறங்களைக் கூட கரைத்து விடும் ஒரு துல்லியமான அனுபவமாக. பிரிவு, வறுமை, தோல்வி போன்ற வாழ்க்கையின் கட்டங்கள் இங்கு சோகமாக அல்ல, பரிணாம நிலைகளாக பார்க்கப்படுகின்றன. பின் நோக்கிய நினைவுகள் குவிந்தாலும், முன்நோக்கிய பயணம் நிற்கவில்லை. வறுமை தடையாக இருந்தாலும், கானலில் கூட  பசுமை முளைக்கும் என்பது போல் நம்பிக்கை மறையவில்லை.' இரு துணையின் ஒற்றை பல்லக்கு' என்பது காலத்தின் சுமையையும் உறவின் நிலைத்தன்மையையும் ஒரே உருவகத்தில் இணைக்கிறது. கவிதையின் இறுதியில் தன்னுயர்வு முக்கியமாகிறது. வெளிப்புற உலகின் குழப்பம், தர்க்கம், சிதைவு ஆகியவற்றை கடந்து, தனி மனிதன் தனது உள்ளார்ந்த மகுடத்தை அடையும் நிலை வெளிப்படுகிறது. வாழ்க்கை ( கதம்பம்), ஆனால்  ஒரு விதை போல் மனிதன்...

வறுமை

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை, வறுமையை ஒரு பொருளாதார நிலையாக அல்லாமல், மனித உடல், உயிர், சுவாசம், காலம் மற்றும் சமூக அடுக்குகள் அனைத்தையும் ஆக்கிரமிக்கும் முழுமையான அனுபவமாகப் பதிவு செய்கிறது. வாய்ப்புகள் இருந்தும் அனுமதி மறுக்கப்படும் சமூக வாசல்கள், அடிப்படை தேவைகளே அடைப்பாக மாறும் வாழ்வியல் சூழல், உயிர் காக்க வேண்டிய ஆதிமூல சக்திகள் உயிர் கெடுக்கும் பசியாக உருமாறும் நிலை ஆகியவை இதில் தீவிரமாக வெளிப்படுகின்றன. இறுதியில் மண்ணுக்குள் புதைந்திருக்கும் கம்பீரம் மேல்தளத்தை அசைக்க முனைவது மூலம், ஒடுக்கப்பட்ட வாழ்வின் அடக்கமில்லாத எதிர்ப்பும் மறைந்த வலிமையும் உணர்த்தப்படுகிறது. கவிதை முழுமை பெற்ற அடித்தளங்கள் காற்றில் பயணிக்க தேர்ந்தெடுக்கப்படாதவை- நிறைவாகிய வாசல் வரவேற்கவும் அனுமதி இல்லாதவை. வறுமையின் பிடியில்- செந்நீர் ஊற்று ஊடுருவ மறுக்கும், வெள்ளைக் கூட்டின் நகலாய் படர்ந்திருக்கும் மேலாடை சுருக்கமும் விரிவடைய மறுக்கும், ஆதி மனிதனின் உயிர் வளர்த்த நெருப்பு, பசியாய் உருவெடுத்து உயிர் கெடுக்க இசையும், உடல் சுமக்கும் பாதங்களும், தடம் காணும் கைகளும் பாரமென மண்ணில் இளைப்பாற நினைக்கும், விழித்தி...

நானும் அவளும்

படம்
உள்ளடக்கம் இயற்கையின் மடியில் மலர் ஒரு உயிராகப் பிறந்து, மொட்டாகி, மலர்ந்து வண்ணத்துப் பூச்சிகளுடன் உறவாடி தன் வாழ்வை நிறைவு செய்து உதிரும் தருணம் வரை நிகழும் வாழ்க்கைச் சுழற்சியை இந்தக் கவிதை சித்தரிக்கிறது. உதிர்வு இங்கு இழப்பாக அல்ல: தொடர்ச்சிக்கான அமைதியான பிரியாவிடையாக வெளிப்படுகிறது கவிதை இலை  தாங்கிய  மொட்டுக்கள் இரவின்  காவலில் இதழ்  விரித்து, பனித்துளியில்  நீராடி, வெண்கதிரில்  இதழ்  உலர்த்தி, வண்டிசையின்  வரவேற்பில் தேவதைகள்  கைப்பட ஒற்றை  நாற்காலியில் வீற்றிருக்கின்றன. முட்கள்  பதித்த திரைமறைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட  வண்ணங்களை, ஓவியமாய்  தீட்டப்பட்ட  இறகுகள், காற்றினும்  மெல்லிய  இடை  விரிந்து, இயற்கை  பகிர்ந்த  பருவ கால இரகசியத்தை கொண்டு  சேர்க்கும் வண்ணத்து  பூச்சி மலரின்  உற்ற தோழன். எண்களின்  முதன்மையாய் வரிசைகள்  பின்தொடரும் ஒற்றை  பொழுதின், விதி சுமந்து இயற்கையுடன் ஒன்றென கலந்த உயிரின்  இழப்பை, மலர் பொழிந்து, பிரியாவிட...

களம்

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை மண், இனம், வேர், கொடி, தலைமை ஆகிய உருவகங்களின் வழியாக ஒரு சமூகத்தின் அரசியல்- பண்பாடு பயணத்தை பேசுகிறது. மண்ணின் தாகம் என்பது அடக்கப்பட்ட மக்களின் உயிர்த்தாகமாகவும், ஊற்றாய் உயிர் வளர்ப்பது கூட்டு முயற்சியையும் குறிக்கிறது. வேர் - விதை- துளிர் என்ற இயற்கை சுழற்சி இனத்தின் தொடர்ச்சியையும், காலத்தை கணிக்கும் அரசியல் விழிப்புணர்வையும் காட்டுகிறது. தனிநபர் அல்ல, கூட்டு உணர்வே தலைமை எனும் கருத்து, " தலைவனின் இலக்கணம்" பகுதியில் வலுவாக நிறுவப்படுகிறது. கவிதை மண்ணின் தாகம் ஊற்றாய் உயிர் வளர்க்க, பாதம் பதிந்த நிலமும் ஒரு குரலில் சுவாசிக்க, என் இனம் எனும் வேர் கரங்களை கட்டி மையத்தில் சின்னம் ஏற்றி, கொடியாய் சிகரம் தொட்டது. கோபுரமாய் உயர்ந்த மணல் திட்டுக்கள், காற்றின் சுழற்சியில் திசை நான்கில் பயணித்து தாய் கொடியின் நகலாய், கலம் காண பயணிக்கின்றது. இனத்தின் உயிர் புதைந்த வேர் காலத்தின் கணிதனாய், உள்ளும் புறமும் நன்கறியும்- காற்றில் அலைப்பாயும் சரகுகளை உரமாய் தன்னுள் வளர்த்து, காட்டாற்றின் நீரை நெறிப்படுத்தி, தன்னுள் ஈர்த்துக்கொண்டு பருவங்கள் எதிர்நோக்கி, துளிர் ...

முரண்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனிதன் தனது உடல், உணர்வு, காலம் மற்றும் உறவுகளுடன் எதிர்கொள்ளும் மாற்றங்களை அச்சமின்றி ஏற்றுக்கொள்ளும் மனநிலையை வெளிப்படுத்துகிறது. உயர்வு- தாழ்வு, இளமை- முதுமை, தனிமை- துணை போன்ற இருமைகளின் நடுவில் நின்றும், அகந்தை அல்லது தளர்வு இன்றி தொடரும் சுயநிலையே இதன் மைய சூழலாக அமைகிறது. ஒவ்வொரு செயல்பாடும் பயத்தின் மறுப்பாகவும், விழிப்புணர்வின் உறுதியாகவும் பதிவு செய்யப்படுகிறது. கவிதை தலைக்கனம்  மதிகெடுக்கும்  என உச்சி நிமிர ஆராய்வதில்லை, இமைகள்  விடைப்பெறும் என விழிகள்   விழித்திருக்க  தயங்குவதில்லை, சுவாசத்தின்  பரிமாற்றம்  அழற்சி  தருமென கண்களின்  நேர்கோடு  விலகுவதில்லை, நாவின்  உரசல்கள்  பிளவுபடும் என உதடுகள்  பிரிந்திருக்க  அஞ்சுவதில்லை, ஒலியின்  நீளம் மிகினும், குறையினும் துருவங்கள்  ஒன்றினைவதில்லை, கரங்களின் நேர்த்தியை முதுமை பின்தள்ளும்  என விரல்கள் நடுங்குவதில்லை, பாதங்களின்  அழுத்தத்தை கைத்துணை பகிர்ந்துகொள்ளும்  என நடை தளர்வதில்லை, ஒரு நொடி  ...

தேடல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை " தேடல்" என்பதை இயற்கையின் அடிப்படைத் தன்மையாகவும், உயிரின் அடையாளமாகவும் முன்வைக்கிறது. கதிரவன் முதல் உயிர் வரை அனைத்தும் தமக்கான நிறைவை, எல்லையை அல்லது விடுதலையை நோக்கி இடையறாது பயணிக்கின்றன. அந்த தேடல் வெளிப்படையான இலக்கை அடைவதற்கல்ல: கரைதல், இளைப்பாறு, அனுமதி போன்ற உள்ளார்ந்த நிலைகளை அடைவதற்கானது. கவிதையின் முடிவில் கூறப்படும்" காட்சிக்கு தென்படாதவை" என்பது தேடலின் உண்மையான நீளம் கண்களால் அளக்க முடியாதது: அது உணர்விலும் அனுபவத்திலும் மட்டுமே அறியப்படுவதாகும். இதன் முலம் மனித வாழ்க்கையின் அஸ்தித்வப் பயணமும் இயற்கையின் ஓட்டத்தோடு ஒப்பிடப்படுகிறது. கவிதை கதிரவனின்  தேடல்- நீலம் படிந்த கூரை தாழ்ந்து  மண்ணில் புதையும் வரை, காற்றின் தேடல்- சுவாசம் மறந்த நாடி இளைப்பாறும் வரை, கடலின் தேடல் - ஆழம் தடைப்படும் மண்குவியல் தோன்றும் வரை, பனியின் தேடல் - வெப்பம் சிதைக்கும் வெண்பாறை ஓடை காணும் வரை, நெருப்பின் தேடல் - செந்நிறம் மறைத்த காரிருள் வானில் படியும் வரை, வெப்பத்தின் தேடல் - உமிழ் தொலைத்த தாகம் நன்னீர் சேரும் வரை, அமைதியின் தேடல் - கலவரத்தின் நிழல...

கடல்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை காலத்தின் ஓட்டத்தை நீரின் அலைகளாக உருவகித்து, இயற்கை, மனித இனம் மற்றும் வரலாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதை வெளிப்படுத்துகிறது. மறைவு, இருள், மௌனம் ஆகியவற்றுக்குள் கூட புதிய விடியல் பிறக்கிறது. மண்ணை வளர்த்தும், இனத்தை உருவாக்கியும், கலை- பண்பாட்டை வடிவமைத்தும் வர- லாற்றில் தடம் பதித்த முன்னோடிகளின் உழைப்பு, சொல்லப்படாத காவியங்களாக உறங்குகிறது. தற்காலி கமான உடமைகளைத் தாண்டி, மண்ணின் ஆழத்தில் தவமிருக்கும் ஒளி, தடைகளை உடைத்து எதிர்காலத்தை நோக்கி எழும் நம்பிக்கையாக கவிதை நிறைவு பெறுகிறது. கவிதை காலத்தின் பதிவுகளை நீர் ஏட்டில் குறித்த அலையின் பக்கங்கள், திறக்க கரை தொடுகின்றன நட்சத்திரங்களின் மறைவில் புதிய விடியல் தோன்றும் இயற்கையின் விதியில்- மண் வளர்த்து இனம் வளர்த்து கற்சிற்பம் வடிவமைத்து வரலாற்று ஏட்டில் கால்பதித்த முன்னோடிகள் கதிரவனின் முரண்பட்ட பாகத்துக்குள் நீரை மட்டும் சுவாசித்து காரிருளில் அமைதியாய் உறங்கும் காவியங்கள்  நூறாயிரம், வரலாற்றின் பாதங்கள் நடைத்தளறாது முன்னோக்கி செல்ல அடியமைத்துக் காத்திருக்கின்றன கண் பட்ட  உடமைகள் கைப...

எதிர்முனை

படம்
 உள்ளடக்கம் இந்தக் கவிதை உலகத்தில் காணப்படும் சக்தி, கட்டுப்பாடு, அதிகாரம் ஆகியவை எதனால் நார்ணயக்கப்படுகின்றன என்பதைக் குறித்து சிந்திக்கிறது. இயற்கை நிகழ்வுகள், காலம், மனித உழைப்பு, சமூக அமைப்புகள், மனநிலை மற்றும் அகந்தை ஆகிய வை தத்தம் காரணிகளின் வசப்படுத்தலுக்குள் இயங்குகின்றன என்பதை வரிசையாகக் காட்டுகிறது. ஆனால் இறுதியில், உண்மை, நேர்மை மற்றும் ஆழ்ந்த புரிதல் ஆகியவை எந்தக் கட்டுப்பாட்டுக்கும் முழுமையாக உட்படாதவை என்பதை உணர்த்துகிறது. இது மனிதன் எல்லாவற்றையும் அளக்கவும், ஆளவும் முடியும் என்ற அகந்தைக்கு எதிரான ஒரு தத்துவக்  கேள்வியாக நிற்கிறது. கவிதை இருளின் கர்வம் மின்மினி  வசப்படும், வெண்மேக நிறம் காரிருள்  வசப்படும், நீரின்  வேகம் கூழாங்கல்  வசப்படும், மலை முகடின் உயரம் உளியின்  வசப்படும், வெண்பஞ்சு  காலம் திரியின்  வசப்படும், சுட்டெரிக்கும்  அனல்காற்று பருவமழை  வசப்படும், குளிர்பனி காலம் கதிரவன்  வசப்படும், கனமான இதயம் இறையருள்  வசப்படும், செல்வச்செருக்கு வள்ளல்  வசப்படும், வறுமையின்  துயரம் உழைப...

இரண்டெழுத்து

படம்
உள்ளடக்கம் வாழ்க்கை பயணத்தில் திசை மாறும் தருணங்கள், உறவுகளில் ஏற்படும் இடர்பாடுகள், நம்பிக்கை இருந்தும் ஒளி மறையும் நிலைகள்- இவை அனைத்துக்கும் காரணமாக வெளிப்படையாக விதி தோன்றினாலும், உண்மையில் அது மனித நன்னடத்தை தவறும் இடங்களில் உருவாகும் விளைவு என்பதை இக்கவிதை வெளிப்படுத்துகிறது. இயற்கையும் வாழ்க்கையும் ஒரே சிந்தனைப் பாதையில் இணையும் தத்துவப் பின்னணியே இதன் சூழல். கவிதை பொருள் உணரா பயணத்தில்- இருள் எதிர்த்த விடிவெள்ளி திசை உணர்த்த நினைத்தாலும், கரை படிந்த வெண்முகில் மதி மறுத்தும், இடை வலுத்தும், இமை தூரிகை இதமாய் சம்மதித்தாலும், தடையும் தரமற்றதாகும் நன்னடத்தை தவறிய விதியால்.. தென்றல் அசையும் மாடத்தில், வெண்மலர்கள் தரை தவழ்ந்து நறுமணம் சூழும் தருணத்தில், வேரறுத்த சூறைக்காற்று இடர் ஏற்று, நிலை குலைத்தது நன்னடத்தை தவறாய விதியால்.. உறவு பாலம் தழைத்து வாழையின் வரிசை தொடர்ந்தாலும், வசை பாடும் கரையான் கூட்டம் அரிக்க நினைத்தது: பாதை தகர்ந்தது நன்னடத்தை தவறிய விதியால்.. மேற்கில் திசை மறைத்தாலும், கிழக்கில் உதயமாகும்,  எனும் தருணத்தில் காற்றழுத்தம் மேலோங்கி, ஒளியும் முடங்கி போனது, நன்னடத்த...

கானல் நீர்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இல்லாமையின் மூலம் சொல்லப்படும் இருப்பை பேசுகிறது. இயற்கை, கலை, மரபு, உணர்வு, பெண்ணியம் - எல்லாவற்றிலும் இருக்க வேண்டிய அடிப்படை பண்புகள் மறுக்கப்பட்டுள்ள ஒரு உலகம் வரிசையாக உருவாக்கப்பட்டுள்ளது. கவிதை முகில்  இடறிய  வானம், பனி படறா புல்வெளி, அலை  உறங்கும் கடல், இலை வருடா பூங்காற்று, பெண்மை மறைத்த நளினம், வாழை மறுத்த விருந்தோம்பல், திசைகள் கலைந்த பூலோகம், கார் முகில் பழித்த மயில்தோகை, தூரிகை துறந்த அழகோவியம், தளபதி முன்மொழியா போர்முழக்கம், ஜதி இணையா நாட்டியம், மழை நனையாத மலையருவி, மழலை உணரா தாலாட்டு, தேரடி காணா தேரோட்டம், இரவு விழித்திராத விடி வெள்ளி, மலர்கள் நுகராத தேனீக்கள், வெயில் வடித்த வானவில், வரலாறு பதியாத செப்பேடு, சுமை விழுங்கிய பெண்ணாற்றல் கண்டும், காணாமலும் அசைப்போடும் சிலை வடித்த முகபாவம் கானல் நீரில் கரையும் உயர்வு பெற்றது.

இரு

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை இயற்கை, மனித சமூகம், மனம், காலம் ஆகிய அனைத்திலும் இயல்பாக இனைந்து வாழும் இரட்டைத்தன்மைகளை(  இருள்- ஒளி, நன்மை- தீமை, அன்பு- பகை, பிறப்பு- இறப்பு) தத்துவ  ரீதியாக ஆராய்கிறது. எதிர்மறைகள் ஒன்றுக்கொன்று எதிராக அல்ல: ஒரே பயணத்தின் இணைநடப்பாளர்கள் என்ற பார்வையை முன் வைக்கிறது. நொடிகள் ஓடிக்கொண்டே இருந்தாலும், அந்த ஓட்டத்திற்குள் மனிதன் தேடும் ஓய்வு, அர்த்தம், சமநிலை ஆகியவற்றை கவிதை சுட்டிக்காட்டுகிறது. கவிதை இயற்கையின் வசிப்பிடத்தில் இரவும் பகலும், முகம்காட்டா விருந்தினர்கள். கதிரவனின் தாகம் தீர்க்கும் அடர்ந்த கோப்பைக்குள் இருளும் வெளிச்சமும், விண்வெளி சாயல்கள். இறைவன் காணும் நடைப்பாதையில் நன்மையும் தீமையும், கைகோர்க்கும் வழிபோக்கர்கள். மனிதன் ஆளும் சமூகத்திற்குள் அன்பும் பகையும், ஓயாமல் அசையும் ஊஞ்சல்கள். மதி வளர்த்த கணிதத்தில் ஒன்றும் நூறும், துணை விரும்பா ஆற்றல்கள். வெளிச்சத்தில் கண்விழித்தும், இரவில் கண்ணசரும் பயணத்தில் பிறப்பும் இறப்பும், சலிப்பில்லா மரபு சூழற்சிகள். மனம் புதைந்த உயிர் வட்டத்திற்குள் இன்பமும் துன்பமும், வெற்றிடம் கண்காணிக்கும் உளவாளிகள்...

நினைவுகள்

படம்
உள்ளடக்கம் இந்தக் கவிதை மனத்தின் அனுமதி- மறுப்பு, உணர்வுகளின் நுழைவாயில், நினைவுகளின் சுழற்சி, மற்றும் மனிதன் உலகில் பதிக்கும் தடத்தின் தத்துவத்தை பேசுகிறது.  முகவரி இல்லாத எண்ணங்கள், அனுமதி பெறாத உணர்ச்சிகள் கோபமாக மாறும் விதம், மென்மையை உணரத் தெரிந்த பாதங்களுக்கும், காலச் செருக்கில் கரடுமுரடாகிய பாதங்களுக்கும் இடையிலான வேறுபாடு இங்கு வெளிப்படுகிறது. இயற்கையின் வடிவமைப்பில் மனிதன் பதிக்கும் கால் சுவடுகள் உலகின் சமநிலையைச் சிதைக்காமல், மாறாக இரு துருவங்களையும் இணைத்து கேட்க முடியாத இன்னிசையோடு அண்டம் நடனமாடும் என்ற தத்துவ உணர்வை கவிதை எடுத்துரைக்கிறது. கவிதை முகவரி இல்லாத வரிகளின் தொகுப்பு- மனதிற்கு மட்டும் புலப்படும் சம்பவங்களின் அணிவகுப்பு. மனதின் அனுமதி பெற்று, இதய வாசலில் நுழைய காத்திருக்கும் பயணச்சீட்டு, அனுமதி இல்லாததால் கோபத்தணலில் வெளியேறும் வன்மங்கள். இதழின் மென்மையை உணரும் பாதங்கள், இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட செயலின் வெளிப்பாடு., காலச்செருக்கில் முட்களை பதம்பார்த்த பாதங்கள், நினைவெனும் காலச்சுழற்சியை அனுபவிக்க தகுதியற்றவை. உலகின் வடிவம் இயற்கை சார்ந்தது என்றாலும் உயிராய...