பயணம்
உள்ளடக்கம்
இந்தக் கவிதை மனிதன் இயற்கையுடன் மேற்கொள்ளும் பயணத்தைச் சொல்லும் ஒரு உணர்வுப் பதிவு. பூமி மனிதனுக்குச் சொல்வது ஒன்று மட்டுமே- நாம் உரிமையாளர்கள் அல்ல: விருந்தினர்கள்.
கவிதை
பாதங்கள் இளைப்பாற
விழிகள் மட்டும் விழித்திருக்க
கிழக்கும்,மேற்கும் ஒரு சேர வரவேற்க,
மேகங்கள் வெண் கம்பளம் விரிக்க
காற்றும் இலை தழைகளும் சாமரம் வீச,
யுகங்களாய் முதுமை தழுவாத
பூமி பெண்ணின்
இருப்பிடம் காணும் முனைப்புடன்
ஒரு பயணம்.
பச்சை நிலப்பரப்பில்
நிறங்கள் ஏழு வண்ணம் தீட்ட,
சாரல் மழை சந்ததி வளர்க்க,
செழுத்திருக்கும் பசுமை கூட்டுக்குள்
அனுமதியின்றி கால் பதித்ததால்
செந்நிற சீற்றத்துடன்,
தலைவிரிக் கோலமாய்
நில மகள் தன்னைத் தானே
அழித்த சுவடுகள்,
அச்சுருத்தும் நிஜங்கள்.
விண்கற்களின் உயிர் நடுங்கும் ஒலி
பூமியின் சமநிலை குன்றியதால்
இயற்கையின் சுற்றத்தார்
விடுக்கும் எச்சரிக்கை.
நிலத்தின் மூதாதையர்
வாழும் நீல போர்வைக்குள்
புதைந்திருக்கும் மர்மங்களை
கட்டவிழ்க்க முற்பட்டதால்
பேரலை என்னும் பேரிடரால்
மனித கூட்டம் வாழ்வை இழந்தது.
விதிக்கப்பட்ட எல்லைக்குள்
விருந்தினராய் அகம் மகிழ்ந்து
வாழ்ந்து, வருபவரையும் வாழவைப்போம்.
Fantastic
பதிலளிநீக்கு